ETV Bharat / bharat

மேற்கு வங்கத்திலும் திராவிட மாடல்! நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்! - West Bengal NEET Ban Resolution

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 9:19 AM IST

தமிழ்நாட்டைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Etv Bharat
West Bengal Assembly (ETV Bharat)

கொல்கத்தா: நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கிளம்பின. இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தொடர் முழக்கங்கள் எழுந்துள்ளன.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டபேரவையில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன் மேற்கு வங்க மாநில அரசு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை. நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக் கூடாது என அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறியதாக தெரிவித்தார். மேலும், 30 முதல் 40 லட்ச ரூபாய்க்கு வினாத் தாள்கள் கசிந்ததை தெரிந்து கொண்டதாகவும், நாட்டில் உள்ள 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதாக கூறினார். நீட் தேர்வை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட்டு விட வேண்டும் என்றும் மாநில அரசு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வை நடத்தலாம் என்று தெரிவித்தார்.

அதேநேரம், நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வினாத் தாள் கசிந்தது தொடர்பாக எந்தவொரு நிலையான ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை! டிஆர்டிஓ வெற்றி! - DRDO

கொல்கத்தா: நடப்பு ஆண்டில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத் தாள் கசிவு, ஆள் மாறாட்டம், நீட் தேர்வு மையங்களே நீட் முறைகேடுகளை முன்னெடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கிளம்பின. இதையடுத்து நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. நீட் முறைகேடுகளை முன்வைத்து நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி கட்சிகள் முடக்கின.

இதற்கிடையே, தமிழ்நாடு சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தொடர் முழக்கங்கள் எழுந்துள்ளன.

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை சட்டபேரவையில் நிறைவேற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதேநேரம் நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன் மேற்கு வங்க மாநில அரசு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாசு கூறுகையில், அகில இந்திய அளவில் தேர்வை நடத்துவதற்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவாக இல்லை. நீட் தேர்வை மத்திய அரசு நடத்தக் கூடாது என அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கூறியதாக தெரிவித்தார். மேலும், 30 முதல் 40 லட்ச ரூபாய்க்கு வினாத் தாள்கள் கசிந்ததை தெரிந்து கொண்டதாகவும், நாட்டில் உள்ள 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாழாகி வருவதாக கூறினார். நீட் தேர்வை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட்டு விட வேண்டும் என்றும் மாநில அரசு வெளிப்படைத் தன்மையுடன் தேர்வை நடத்தலாம் என்று தெரிவித்தார்.

அதேநேரம், நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. வினாத் தாள் கசிந்தது தொடர்பாக எந்தவொரு நிலையான ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இதையும் படிங்க: பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை! டிஆர்டிஓ வெற்றி! - DRDO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.