ETV Bharat / bharat

7 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெற்றி நிலவரம் சொல்வது என்ன? - 7 states ByElection Result 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 13, 2024, 7:29 AM IST

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் பல்வேறு காரணங்களால் காலியாக இருந்த 13 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Etv Bharat
Representational Image (ECI)

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின் நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பீகார் மாநிலத்தின் ருபவுலி, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மத்திய பிரதேசத்தின் அமரவரா, பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலுர், மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்‌ஷின், பாக்டா, மணிக்தலா மற்றும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று (ஜூலை.13) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்த தேர்தல் நடைபெற்று உள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்புடன் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு அளித்ததை தொடர்ந்து, மார்ச் 22ஆம் தேதி மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ரேசில் இருந்து அதிமுக விலகிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழகர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அந்நியூர் சிவா, நாம் தமிழர் கட்சியின் அபிநயா பொன்னிவளவன் மற்றும் பாமக சார்பில் களம் கண்ட அன்புமணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், 12 மணி அளவில் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெற்றி யாருக்கு? - Vikravandi ByElection Result 2024

டெல்லி: மக்களவை தேர்தலுக்கு பின் நாடு முழுவதும் உள்ள 7 மாநிலங்களில் காலியாக இருந்த 13 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

பீகார் மாநிலத்தின் ருபவுலி, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க், மத்திய பிரதேசத்தின் அமரவரா, பஞ்சாப்பின் மேற்கு ஜலந்தர், உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத், மங்கலுர், மேற்கு வங்கம் மாநிலத்தில் ராய்கஞ்ச், ரனகட் தக்‌ஷின், பாக்டா, மணிக்தலா மற்றும் தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி ஆகிய 13 தொகுதிகளில் கடந்த ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்ற 13 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று (ஜூலை.13) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மக்களவை தேர்தலுக்கு பின்னர் இந்த தேர்தல் நடைபெற்று உள்ளதால் நாடு முழுவதும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அங்கு ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் முனைப்புடன் காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் தேஹ்ரா, ஹமிர்பூர், நாலகர்க் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு அளித்ததை தொடர்ந்து, மார்ச் 22ஆம் தேதி மூன்று சுயேட்சை எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து மூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் நா.புகழேந்தி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ரேசில் இருந்து அதிமுக விலகிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழகர் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது.

மொத்தம் 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட அந்நியூர் சிவா, நாம் தமிழர் கட்சியின் அபிநயா பொன்னிவளவன் மற்றும் பாமக சார்பில் களம் கண்ட அன்புமணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. காலை 8.30 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், 12 மணி அளவில் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! வெற்றி யாருக்கு? - Vikravandi ByElection Result 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.