ETV Bharat / bharat

இந்தியாவில் அபுதாபி பட்டத்து இளவரசர்; இந்தியா - யுஏஇ இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்! - MoU between UAE and india

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 8:14 PM IST

Abu Dhabi Crown Prince Al Nahyan in india: இந்தியா வந்துள்ள ஐக்கிய அரசு எமிரேட்ஸ் (யுஏஇ) அதிபர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அலி நஹ்யான் இந்தியாவுடன் வர்த்தக ரீதியில் முக்கிய ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.

அபுதாபியின் பட்டது இளவரசருடன் பிரதமர் மோடி
அபுதாபியின் பட்டது இளவரசருடன் பிரதமர் மோடி (credit - ANI)

புதுடெல்லி: ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபியின் பட்டத்து இளவரசருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அலி நஹ்யான் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்றைய தினம் வந்தடைந்தார். இவர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, அணுசக்தி மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பராக்கா அணுமின் நிலையத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (ENEC) மற்றும் இந்திய அணுசக்திக் கழகத்திற்கும் (NPCIL) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே நீண்ட கால எல்என்ஜி விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட் ((ISPRL), உர்ஜா பாரத் மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி இடையே உற்பத்தி சலுகை ஒப்பந்தம் மற்றும் குஜராத் அரசுடன் உணவுப் பூங்காக்கள் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகியிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நாளை 5 மணி வரைதான் கெடு! மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்!

புதுடெல்லி: ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபியின் பட்டத்து இளவரசருமான ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அலி நஹ்யான் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு நேற்றைய தினம் வந்தடைந்தார். இவர் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, அணுசக்தி மற்றும் பெட்ரோலியம் போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இன்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,'இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பராக்கா அணுமின் நிலையத்தை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (ENEC) மற்றும் இந்திய அணுசக்திக் கழகத்திற்கும் (NPCIL) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் இடையே நீண்ட கால எல்என்ஜி விநியோகத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி (ADNOC) மற்றும் இந்தியன் ஸ்ட்ராடஜிக் பெட்ரோலியம் ரிசர்வ்ஸ் லிமிடெட் ((ISPRL), உர்ஜா பாரத் மற்றும் அபுதாபி நேஷனல் ஆயில் கம்பெனி இடையே உற்பத்தி சலுகை ஒப்பந்தம் மற்றும் குஜராத் அரசுடன் உணவுப் பூங்காக்கள் மேம்பாடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்டவை கையெழுத்தாகியிருக்கிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: நாளை 5 மணி வரைதான் கெடு! மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.