தமிழ்நாட்டில் 'குழந்தைகள் ஆபாச படம்' பார்ப்பவர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என காவல் துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து, சமூக வலைதளங்களில் ஆபாச படம் பகிர்ந்த 40 பேர் குறித்த தகவல்களை சென்னை தனிப்படையினர் ரகசியமாக ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் அனுப்பிவைத்தனர்.
அதனடிப்படையில், ஒவ்வொரு மாவட்ட கண்காணிப்பாளரும் முகநூல், சமூக வலைதளம் ஆகியவற்றை அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் காவல் துறையினர் அந்தப் பட்டியலில் உள்ளவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தை கண்காணித்துவந்தனர்.
அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் அஸ்ஸாம் இளைஞர் ஒருவரின் ஃபேஸ்புக் பக்கங்களைக் கண்காணித்துவந்தனர்.