தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தாமரை, மணிமேகலை ஆகியோர் சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், 'தென்காசி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடம் கறவை மாடு மற்றும் தையல் இயந்திரம் வாங்கிக் கொடுக்க வங்கிகளில் கடன் பெற்று தருவதாகக்கூறி , விண்ணப்பிக்கும் நபர்களிடம், ஒருவருக்கு ரூ.1,000 மற்றும் ரூ.500 என்று வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த வசூலை சேலத்தைச் சேர்ந்த வெண்ணிலா (47), அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் (37) செய்து வருகிறார்கள்.
இதேபோல் இருவரும் தென்காசி மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 லட்சம் வரை பணம் வசூல் செய்துள்ளனர். பல மாதங்களாகியும் கறவை மாடுகள், தையல் இயந்திரங்கள் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றி, மோசடி செய்துள்ளனர்' என்று புகார் கூறப்பட்டிருந்தது.
இந்தப் புகார் மனுவின் மீது சேலம் மத்திய குற்றப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் அமுதா விசாரணை நடத்தினார்.