தமிழ்நாடு

tamil nadu

ஈரோடு பவானிசாகர் அணை நீர்மட்டம் 54 அடியாக உயர்வு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:53 AM IST

பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை (Credits-ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டதாகும். பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இதன் காரணமாக அணை நீர்மட்டம் கடந்த மே 18ம் தேதி 44அடியாக சரிந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்ததன் காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் 44 அடியாக இருந்த நிலையில் இன்று அணை நீர்மட்டம் 54 அடியை எட்டியது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1074 கன அடியாகவும், நீர் இருப்பு 5.4 டி.எம்.சி ஆகவும் உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details