தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 7:52 PM IST

ETV Bharat / state

"இனியாவது முதலமைச்சர் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்" - தவாக தலைவர் வேல்முருகன்! - kallakurichi Illicit liquor tragedy

T Velmurugan on Kallakurichi Illicit liquor tragedy: கள்ளச்சாராய மரணம் விவகாரத்தில் காவல்துறை மீது மட்டுமே முழு பழியை சுமத்தாமல், அப்பகுதியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர், அக்கட்சியின் சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், "கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணத்தில் கொத்துக் கொத்தாக தமிழக மக்கள் மரணம் அடைந்துள்ளனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இது குறித்து, முதலமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் தீர்மானத்தை கொண்டுவந்து, சில கருத்துகளையும் சட்டப்பேரவையில் முன்வைத்துள்ளேன். அதாவது கள்ளச்சாராய மரணம் ஏற்படும் போது, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும் அல்லது அவர்களை பணியிட மாற்றம் செய்வதும் ஒரு தீர்வு ஏற்பட போவதில்லை.

குறிப்பாக காவல்துறைக்கு ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக இருக்கிறது. முதலில் காவல் துறையில் இருக்கிற கூடிய அனைத்து காவலர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளையும் கொடுத்துவிட்டு, பின்னர் இதுபோன்று சம்பவங்கள் உடந்தையாக இருக்கும் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி, அவர்களை கைது செய்து சட்டத்துக்கு முன்பாக நிறுத்தி வேண்டும். இதுதான் இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.

மேலும், இதுபோன்ற சம்பவத்திற்கு காவல்துறை மீது முழு பழியைச் சுமத்தவும் கூடாது. அப்பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உட்பட சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் அதிகாரிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக, பொதுமக்கள் மனு கொடுக்கும் போது மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்கள் மனுவை வாங்குவதில்லை என மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அதை சரி செய்ய வேண்டும்.

2021ஆம் ஆண்டு, கொரோனா காலகட்டத்தில் கள்ளச்சாராயம் அதிக அளவில் கடத்தப்பட்டது குறித்து புகார் கொடுத்தும் தற்பொழுது வரை வழக்கு பதிவு படவில்லை. அதில் சம்பந்தப்பட்ட எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து அனைவரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகளை அரசியல்வாதிகள் காப்பாற்றுகின்றனர். இந்த விவகாரத்தில், எம்எல்ஏ, எம்பி என பாரபட்சம் இல்லாமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளும் கட்சியினர் காவல்துறை உயர் அதிகாரிகளை பார்க்க முடியவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் நீதியரசர் அறிக்கை தாக்கல் செய்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது.

அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட காவல்துறை உயர் அதிகாரிகள் சந்திக்க மறுக்கின்றனர். சட்டப்பேரவையில் நான் பேசியது குறித்த வீடியோவை கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். முதலமைச்சர் இதன் பிறகாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சில உயர் அதிகாரிகள் முதலமைச்சருக்கு முன்பாக ஆளுநர் மற்றும் அண்ணாமலைக்கு தகவலை கொடுக்கின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் தரலாமா என கேட்கிறார்கள். அந்த ஏழை மக்களுக்கு நிவாரணம் தர வேண்டும். அவர்களின் குழந்தை படிப்பு செலவு தேவைப்படும். எம்எல்ஏக்கள் சம்பளத்தை தாண்டி, நான்கு மடங்கு காவல்துறைக்கு சம்பளமாக கொடுங்கள். ஆனால் தவறுக்கு உடந்தையாக இருந்தால் அவர்களை சிறையில் போடுங்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி விவகாரம்; ஹிட்லர் ஆட்சிபோல சர்வாதிகாரம் - சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஈபிஎஸ் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details