Cyclone Fengal: இன்று எந்தெந்த பள்ளிகளுக்கு விடுமுறை? - SCHOOL LEAVE TODAY
புயல் (Cyclone Fengal) உருவாக வாய்ப்புகள் குறைவு என்றாலும், கன மழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளதால், மாநிலத்தில் சில மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மழை - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நகரத் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும், கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று (நவம்பர் 29) தமிழ்நாட்டில் சில மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சில கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்
சென்னைமாவட்டத்தில் இன்று கனமழை காரணமாகபள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செங்கல்பட்டுமாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறையை மாவட்ட ஆட்சியர் சி. பழனி அறிவித்துள்ளார்.
அதேபோல, கடலூர்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ளார்.
முறையே, விழுப்புரம், கடலூர்மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகிவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் நவம்பர் 29, 2024 அன்று நடைபெறவிருந்த அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
காற்றில் நிலவரம்
தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென் சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 340 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையிலும் மையம் கொண்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 50 மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)