தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை...விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

ராமேஸ்வரம்:இலங்கை நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 மீனவர்கள் படகு ஒன்றில் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் அவர்களின் படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது. விசாரணைக்காக இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு அவர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதனால் 12 மீனவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும் அவர்களின் படகையும் மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details