சென்னை: பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியது, கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஏற்கனவே கோவை போலீசார் மற்றும் தேனி போலீசார் தனித்தனியாக காவலில் எடுத்து சவுக்கு சங்கரிடம் விசாரணை நடத்திய நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சவுக்கு சங்கர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏவின் போலியான ஆவணங்களைத் தயாரித்து அவதூறு பரப்பியதாக மோசடி, போலி ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்கள் மூலம் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துதல் உட்பட 6 பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் கடந்த மே 11 ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக போலீசார் கோவையிலிருந்து சவுக்கு சங்கரை சென்னை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து ஆஜர் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.