நீலகிரி: தமிழகம் முழுவதும் இன்று (மே 18) முதல் 20ஆம் தேதி வரை அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், குன்னூரில் நேற்று (மே 17) இரவு பெய்த மழை 17.1 செ.மீ அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், மூன்று நாட்கள் குன்னூர் பகுதியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குன்னூருக்கு தமிழக அரசின் மாநில பேரிடர் மீட்பு படையினர் 35 பேர் கொண்ட குழு வருகை தந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, அதிகனமழையில் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் பேரிடர் ஏற்பட்டால், உடனடியாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில மீட்புப் படையினர் 35 பேர் மற்றும் நீலகிரி குன்னூர் பேரிடர் மற்றும் முதல் நிலை பொறுப்பாளர்கள் 30 பேர் என பணியில் ஈடுபட உள்ளனர்.