தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் நூதன முறையில் கார்களில் திருட்டு.. கைவரிசை காட்டும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள்! - Robbery in chennai - ROBBERY IN CHENNAI

Robbery in chennai: சென்னை அடையாறு பகுதியில் சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடியை சாதுர்யமாக உடைத்து திருட்டில் ஈடுபட்ட திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்களில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோப்பு படம்
கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 11:26 AM IST

சென்னை:பெங்களூருவைச் சேர்ந்த நித்யா வெங்கட்ராமன் கடந்த 27 ஆம் தேதி நித்யா சென்னை அடையாறு காந்தி நகர் முதல் மெயின் ரோட்டிற்கு காரில் வந்துள்ளார். காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு அருகில் இருந்த அழகு நிலையத்திற்கு சென்று விட்டு, திரும்பி வந்து பார்த்த போது காரின் வலது புற கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த விலை உயர்ந்த லேப் டாப் திருடப்பட்டு இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நித்யா, இது குறித்து அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத 2 பேர் சாதுர்யமாக கார் கண்ணாடியை உடைத்து, லேப் டாப்பை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் திருடர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கார் கண்ணாடியை உடைத்து லேப் டாப்பை திருடியது திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியபோது போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த நிலையில் மீண்டும் ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கைவரிசை சென்னையில் காட்ட தொடங்கி இருப்பது போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்தவர்கள் குறித்து தீவிர விசாரணையில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப், உதயகுமார் என்பது தெரியவந்தது. இவர்கள் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் திருச்சி சென்று பிரதீப்பை கைது செய்தனர். உதயகுமார் தப்பி ஓடி விட்டார். கைதான பிரதீப்பை போலீசார் சென்னை கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட விலை உயர்ந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு சைதாப்பேட்டை 9-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். தலைமறைவான உதயகுமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

யார் இந்த ராம்ஜி நகர் கொள்ளையர்கள்?:1990களின் பிற்பகுதியில் தொடங்கி, தற்போது வரை இந்தியாவின் பல பகுதிகளில் வங்கி, நகைக்கடைகள், ஏடிஎம்கள், பொது இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் உள்ளிட்டவைகளில் ஹேர் பின், கொண்டை ஊசி உள்ளிட்ட பொருட்களை கொண்டு திருடுவதை ராம்ஜி நகர் கொள்ளையர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதே போன்று திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கார் கண்ணாடிகளை நூதன முறையில் உடைத்து லேப் டாப்புகளை திருடியுள்ளனர். இவர்களை அண்ணாநகர் தனிப்படை காவல் துறையினர், பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். அதே பாணியில் இந்த கும்பல் மீண்டும் கொள்ளையை அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

join ETV Bharat WhatsApp channel click here (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க:RTE மூலம் ஒரு கி.மீட்டருக்கு அப்பால் உள்ள குழந்தைக்கு சேர்க்கை மறுப்பு; உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - children admission case

ABOUT THE AUTHOR

...view details