சென்னை:சென்னை எழும்பூர் மண்டல அரசு கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசினர் கண் மருத்துவமனையில் 39வது கண் தான இரு வார விழாவில், கண்தானம் செய்தவர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சிறப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“எழும்பூர் அரசு கண் மருத்துவமனை ஆசியாவின் பழமையான மருத்துவமனை. உலகின் 2வது பழமையான மருத்துவமனை. 13 வயது சிறுவனுக்கும், 70 வயது பெண்மணிக்கும் வெற்றிகரமாக கருவிழி மாற்று அறுவை சிகிச்சை இங்கு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்ற அறிவிப்பையும், அரசாணையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் பின்னர் 249 பேர் தற்போது வரை உடலுறுப்பு தானம் செய்துள்ளனர்.
ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இருந்து 42 கண்கள் இதுவரை தானமாக பெறப்பட்டுள்ளV. தேசிய அளவில் 25 சதவீதம் கண்விழிகள் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் பெறப்படுகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 1,25,634 கண் அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளV. வருடத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு ஆன்லைன் மூலம் மட்டும் இதுவரை 6,750 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர்” என்றார்.
பின்னர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர்,“அதிமுக காலத்தில் தொடர்ந்து மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர் என்பதற்காக 116 மருத்துவர்களுக்கு இடமாற்றம் கொடுத்தனர். எந்த அரசும் மருத்துவர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கையை எடுத்ததில்லை. அந்த 116 பேர் பணியிட மாற்றம் செய்ததன் எதிரொலியாக அதில் ஒரு மருத்துவர் மனஉளைச்சல் காரணமாக உயிரிழந்தார்.