தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவுக்கு சங்கருக்குத் தற்காலிக விடுதலை? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி! - Savukku shankar temporary release - SAVUKKU SHANKAR TEMPORARY RELEASE

Savukku Shankar case: மருத்துவச் சிகிச்சை பெற ஏதுவாக சிறையிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு மனு அளிக்க, சவுக்கு சங்கருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம்
சவுக்கு சங்கர் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 12, 2024, 12:30 PM IST

சென்னை: தமிழக பெண் காவலர்களை அவதூறாகப் பேசிய வழக்குத் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்த 7 வழக்குகள் பதியப்பட்டது. அதையடுத்து, மே 12ஆம் தேதி சவுக்கு சங்கரைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கச் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

ஆனால், அதை எதிர்த்து சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த இரு நீதிபதி அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. அதாவது, நீதிபதி சுவாமிநாதன், குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முகாந்திரம் இருப்பதால் அதை ரத்து செய்வதாகவும், நீதிபதி பாலாஜி உத்தரவில், அரசு தரப்பு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் இரு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.

இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விசாரணைக்காகப் பொறுப்பு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த நிலையில், வழக்கின் மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜி.ஜெயச்சந்திரன், என்ன காரணத்திற்காகச் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது. அதனால் அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும்.

மூன்றாவது நீதிபதி அமர்வு நீதிமன்ற தீர்ப்புகளை மட்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியா? என நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். மேலும், வழக்கில் ஆவணங்கள் இல்லாமல் உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரை செய்தார்.

அதன்படி, வழக்கு நீதிபதிகள் ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவச் சிகிச்சை பெறுவதற்காகத் தற்காலிகமாகச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு சவுக்கு சங்கர் தமிழக அரசுக்கு மனு அளிக்கலாம் எனவும், அந்த மனு மீது சட்டத்திற்குட்பட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 8 வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் புகை பிடித்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details