தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருந்து, அழகுசாதனப் பொருட்களின் ஆன்லைன் விற்பனை; மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! - Drugs and cosmetics online sales

Drugs and Cosmetics: மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான புதிய கொள்கைகளை விரைவாக கொண்டு வர மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 4, 2024, 7:48 PM IST

Tablets
மருந்து மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனை செய்யக்கூடாது என நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து பெங்களூரைச் சேர்ந்த மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இது தொடர்பான வழக்கில், “உரிமம் பெற்றவர்களால் மட்டுமே மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தவறு செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை” என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வர்த்தகத்தை ஒழுங்குபடுத்த மேலும் நான்கு மாதங்கள் ஆகும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் மத்திய அரசு தெரிவித்திருப்பதால், கொள்கை வகுக்க அவகாசம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் குமரப்பன் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் வாதத்தை ஏற்றது. தொடர்ந்து, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆன்லைன் வர்த்தகத்துக்கான கொள்கைகளை விரைவாக கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நேரடி விற்பனையிலும், உரிமம் பெற்றவர்கள் மட்டும் தொடர்ந்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:கருப்பு நிற ஆண்கள் எந்த நிற உடைகளைத் தேர்வு செய்யலாம்.. குட்டி டிப்ஸ்.!

ABOUT THE AUTHOR

...view details