தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள்; வனத் துறை எச்சரிக்கை! - sakkaraipallam floods - SAKKARAIPALLAM FLOODS

forest department warning for sakkaraipallam people: சர்க்கரைப்பள்ளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலையில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நடந்து செல்வது ஆபத்தானது என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

people passing sakkaraipallam floods photo
காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 17, 2024, 1:43 PM IST

காட்டாற்று வெள்ளத்தை கடந்து செல்லும் மக்கள் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக குரும்பூர், சர்க்கரைப்பள்ளம் ஆகிய காட்டாறுகளில் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். காட்டாறு வெள்ளம் காரணமாக, இரு பள்ளங்களை கடந்து செல்லும் அரசுப் பேருந்து பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சர்க்கரைப்பள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதால் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும் அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் கிராம மக்கள் உதவியோடு இருசக்கர வாகனத்தை மேலே ஏற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். சர்க்கரைப்பள்ளத்தில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அறிந்தும் மக்கள் கடந்து செல்வது ஆபத்தானது என வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

கடம்பூர் மாக்கம்பாளையம் இடையே உள்ள குரும்பூர், சர்க்கரைப்பள்ளத்தின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்டபோது, "உயர்மட்ட பாலத்துக்கான கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காசி யாத்திரையின் போது இறந்த மகனை சொந்த ஊர் கொண்டு வர போராடும் தாய்.. ஈரோடு அருகே சோகம்! - TN Man Died Odisha

ABOUT THE AUTHOR

...view details