தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் நடந்துச் சென்ற பெண்ணை முட்டி தூக்கிய மாடு.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சி! - CHENNAI BUFFALO ATTACK - CHENNAI BUFFALO ATTACK

buffalo attack: சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்துச் சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டியதோடு அதன் கொம்பில் சிக்கிய பெண்ணை சிறிது தூரம் இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பெண்ணை முட்டி தூக்கிய மாடு
பெண்ணை முட்டி தூக்கிய மாடு (Credit - Etv Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 17, 2024, 5:31 PM IST

சென்னை:திருவொற்றியூர் பகுதியில் உள்ள அம்சா தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்த மதுமதி என்பவர் நேற்று, அவரது வீட்டில் அருகில் உள்ள உறவினருக்கு உணவு கொடுப்பதற்காக கொண்டு சென்றுக் கொண்டு இருந்தார்.

அப்போது ஆக்ரோஷமாக வந்த எருமை மாடு ஒன்று சாலையில் நடந்து சென்றுக் கொண்டு இருந்த மதுமதிவை மூட்டி தூக்கி தரதரவென இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்த அந்த பகுதியில் துணிகளை இஸ்திரி போடும் கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர் மதுமதியை காப்பாற்ற சென்றபோது அவரையும் மாடு தாக்கியுள்ளது.

மாடு இழுத்து செல்லும் சிசிடிவி காட்சி (Credit - Etv Bharat Tamil Nadu)

மேலும் இதனை தடுக்க வந்த பலரையும் மாடு தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து எருமை மாடு முட்டி படுகாயம் அடைந்த மதுமதியை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மதுமதிக்கு பரிசோதனை செய்ததில் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆழமாக உள்ளதால் 20 தையல் போடப்பட்டுள்ளதாகவும் தலையிலும் காயம் உள்ளதால் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அங்குள்ள தனியார் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் மாடு முட்டிய சம்பவங்கள் நடைபெற்று பொதுமக்கள் அச்சத்தில் இருந்துவரும் நிலையில் தற்போது திருவொற்றியூரில் 33 வயதுடைய மதுமதி என்ற பெண்ணை மாடு முட்டி தரதரவென்று இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி விளக்கம்: மதுமதியை இடித்த எருமை மாட்டை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் அதனை பெரம்பூர் பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றனர். நடப்பாண்டில் இதுவரை சாலையில் சுற்றித்திரிந்த 1117 கால்நடைகள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க:கயிற்றில் சிக்கி காயம் அடைந்த புலி.. சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details