தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

ETV Bharat / state

“உதயநிதி நண்பருக்கு ஏன் பதவி கொடுக்கவில்லை?” துணை முதலமைச்சர் குறித்து வானதி சீனிவாசன் கேள்வி! - Vanathi Srinivasan

இளைஞருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் அன்பில் மகேஷ் இருக்கிறார். அனுபவசாலிகள் வேண்டுமென்றால் டி.ஆர்.பி ராஜா இருக்கிறார். மகன் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு ஏதேனும் தகுதிகள் உதயநிதிக்கு இருக்கிறதா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வானதி சீனிவாசன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ்
வானதி சீனிவாசன், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்:கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி இல்லத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன், 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து வானதி சீனிவாசன் பேசியதாவது, “முதலமைச்சரின் மகன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். 400 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக, தியாகியாக திமுகவிற்கு இருந்து ‘எப்படி எல்லாம் வேலை வாங்கிக் கொடுப்பதற்காக பணம் வாங்கினோம். ஆனால், புகார் கொடுத்த உடன் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளோம்’ என்று கூறிய ஒரு முன்னாள் அமைச்சர் மீண்டும் அமைச்சராகிறார்.

வானதி சீனிவாசன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திராவிட மாடல் என்பது வாரிசு அரசியல்:திமுக 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட மாடல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். அதற்கு அவர்கள் சமூகநீதி, சமத்துவம், பெரியாரிய சிந்தனை என்று பல்வேறு விளக்கங்களை கூறுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் என்றால் வாரிசு அரசியல், குடும்ப அரசியல், ஊழல் அரசியல், ஊழலுக்கு துணை போகின்ற அரசியல்.

அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழல்:அமைச்சர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை வைத்துக்கொண்டு, மாநிலத்தின் முதலமைச்சர் நேர்மையான ஆட்சியைத் தருகிறேன் என்று எவ்வாறு கூற முடியும்? வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். திமுக ஒரு காலத்தில் ஜனநாயக ரீதியான கட்சியாக இருந்தது. ஜனநாயகத்தைப் பாதுகாக்கின்ற அமைப்பாக அது பார்க்கப்பட்டது. எளிய மனிதர்கள் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை எல்லாம் அந்தக் கட்சியில் பார்க்க முடிந்தது.

துணை முதலமைச்சருக்கான அவசியம் ஏன்?ஆனால், இன்று திமுகவில் 50, 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர்கள் எங்கோ ஒரு ஓரத்தில் இருக்கிறார்கள். ஒரு குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் இதுதான் திராவிட மாடலா? இன்று துணை முதல்வருக்கான அவசியம் ஏன் வந்திருக்கிறது? இதற்கான காரணத்தை முதலமைச்சர் கூற வேண்டும்.

இதையும் படிங்க:மீண்டும் மின்சாரத் துறை அமைச்சரானார் செந்தில் பாலாஜி.. புதிய அமைச்சர்களுக்கு என்னென்ன பதவி?

அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா துணை முதலமைச்சர் பதவி:மகன் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு ஏதேனும் தகுதிகள் இருக்கிறதா? இளைஞருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்றால் அன்பில் மகேஷ் இருக்கிறார். அனுபவ சாலிகள் வேண்டுமென்றால் டி.ஆர்.பி ராஜா இருக்கிறார். திராவிட மாநாடு ஆட்சியில் பட்டியல் இனத்தைச் சார்ந்த ஒருவரை துணை முதல்வர் பதவி கொடுக்க மறுப்பது ஏன்? பட்டியல் இனத்தை சார்ந்த மக்களுக்கு என்ன இலாக்காக்கள் கொடுக்கப்பட்டுள்ளது?

கூட்டணி கட்சிக்கு அதிகாரம் இல்லையா?அமைச்சர் கயல்விழி அவர்களுக்கு மனித வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய பொறுப்புகள் எல்லாம் ஏன் பட்டியல் இனத்தைச் சார்ந்தவரளுக்கு ஒதுக்கப்படுவதில்லை? கூட்டணி கட்சிகளாக இருக்கின்றவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு இல்லையா? திமுக அரசு தவறுகளை மறைப்பதற்காக புதிய அமைச்சர்கள் என்கின்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு நாடகத்தை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர் மா சுப்பிரமணியம், வாரிசு இல்லாதவர்கள் வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார்கள் என்று கூறுகிறார். திமுகவிற்கும் ஜனநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்? எளிய தொண்டர்கள் எப்பொழுதும் தொண்டர்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் அமைச்சர் சொல்கின்ற நீதியா?

ஜாமின் அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஆட்சி? இதுவரை சிறையில் இருந்த ஒருவர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்திருக்கிறார். இதுபோன்று அமைச்சர்கள் சிலர் திமுகவில் இருக்கிறார்கள். ஜாமின் அமைச்சர்களை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்துகின்ற முதலமைச்சர் எப்படி நேர்மையான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுக்க முடியும்? முதல்வர் தமிழக மக்களுக்கு இதை விட பெரிய துரோகத்தை செய்ய முடியாது.

நேற்று வரை குற்றவாளியாக சிறையில் இருந்த ஒருவர் மாநிலத்தின் அமைச்சராக மாறுகிறார் என்றால் அவருக்கு எதிராக புகார் அளித்தவர்கள் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்று முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும். குற்றவாளியாக இருக்கக்கூடிய ஒருவர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவுடன் அவரை அமைச்சராக்கி அழகு பார்ப்பீர்களா? தியாகி பட்டம் சூட்டுவீர்களா?

துரைமுருகனுக்கு இல்லாத தகுதி உதயநிதிக்கு எப்படி?50 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருக்கின்ற துரைமுருகனுக்கு இல்லாத ஒரு தகுதி எப்படி உதயநிதி ஸ்டாலினுக்கு வந்திருக்கிறது?எந்த அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் துணை முதலமைச்சர் ஆக்குகிறார்? முதலமைச்சர், துணை முதலமைச்சர் என்பவர்கள் ஒரு குடும்பத்தை சார்ந்திருக்கிறது. எனவே ,இது குடும்ப அரசியல், வாரிசு அரசியல். இது தகுதி என்ற அடிப்படையில் இல்லை. மகன் என்ற தகுதி தான் அங்கு முக்கியத்துவம் இருக்கிறது” இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து, என் மீது வரும் விமர்சனங்களுக்கு பணியின் மூலம் பதில் அளிப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்தான கேள்விக்கு, “பணி செய்யட்டும் மக்கள் அதற்கு எவ்வாறு பதில் அளிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

Last Updated : 4 hours ago

ABOUT THE AUTHOR

...view details