திருப்பத்தூர்:தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி தாளாளர் முனிரத்தினம். இவர் பள்ளி தலைவராகவும் இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளியைத் துவங்கும் போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்தார்.
அதன் பேரில், ஒரு பங்கு 25 லட்சம் வீதம், சுமார் 100 பேரிடம் பங்குத்தொகையாக வசூலித்து பள்ளி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. நாளிதழ் விளம்பரத்தின் அடிப்படையில், இக்கல்வி நிறுவனத்தில் முதலீடு தொகையை ஈட்டுவதற்காக நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் (67), ஆலங்காயம் வட்டார உதவி கல்வி அலுவலர் சித்ரா (59), அவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீட்டைப் பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டு உள்ளனர்.
பல கோடி மோசடி?இந்நிலையில், இடைத்தரகர்கள் மூலமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியைச் சேர்ந்த பார்த்தசாரதி ரூபாய் 85 லட்சம், மணி என்பவர் ரூபாய் 23 லட்சம், நாகராஜ் என்பவர் ரூபாய் 45 லட்சம், சாமுண்டீஸ்வரி தேவி பாலா ரூபாய் 25 லட்சம், சரவணன் ரூபாய் 25 லட்சம், இளங்கோ ரூபாய் 25 லட்சம், ஸ்ரீதர் ரூபாய் 20 லட்சம், ராமசுந்தரம் ரூபாய் 3 கோடியே 25 லட்சம், ராஜம் ஒரு கோடியே 75 லட்சம், கஜேந்திரன் 3 கோடி, சுரேஷ்குமார் 1 கோடியே 35 லட்சம் என மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை முதலீடாகப் பெற்று,பள்ளி தாளாளர் முனிரத்தினத்திடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.