கோவை:தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மே 23ஆம் தேதி தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 4 மாநிலங்களில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு மே 23ஆம் தேதி பிளாக் வாரியாகவும், மே 24ஆம் தேதி நேர்க் கோட்டுப்பாதை முறையிலும், மே 25ஆம் தேதி நீர்நிலை பகுதிகளில் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று நிறைவடைந்தது. தமிழகத்தில் கடந்த 2023-ல் நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பின்படி, 2,961 யானைகள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதில், கோவை மாவட்டத்தில் 196 யானைகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இது குறித்து, கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், 'கோவை வனக்கோட்டத்தில் உள்ள ஏழு வனச்சரகத்தில் 42 பிளாக்குகள் உள்ளன.