ETV Bharat / sukhibhava

மழைக்காலத்துக்கு ஏற்ற உணவுகள் எவை? - ஊட்டச்சத்து நிபுணர்கள் அட்வைஸ்!

author img

By

Published : Jun 25, 2023, 2:48 PM IST

மழைக்காலங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீசன் பழங்கள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள், சரிவிகித உணவுகளை சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Expert advice
மழை

டெல்லி: மழைக்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல் மழைக்காலத்துக்கு ஏற்ப புதிய ஜங்க் உணவுகளும் கிடைக்கும். இந்தச் சூழலில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பின்வரும் உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரோகிணி பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தண்ணீர்: மழைக்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். குளிர்ச்சியான வானிலை நிலவினாலும், நம் உடலுக்கு நீரேற்றம் தேவைப்படுகிறது. அதனால், ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

சூடான பானங்கள்: மழைக்காலத்தில் மூலிகை தேநீர், சூப் போன்ற சூடான பானங்களைப் பருக வேண்டும். இவை உடலை சூடாக பராமரிப்பதோடு, உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். கிரீன் டீ போன்ற மூலிகை டீக்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் காய்கறிகளால் ஆன சூப்கள், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.

சீசன் பழங்கள்: மழைக்காலங்களில் ஏராளமான பழங்கள் கிடைக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடலாம். இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, மழைக்கால நோய்கள் வராமல் காக்க உதவும். இந்தப் பழங்கள் உணவில் இயற்கையான இனிப்புச் சுவையை வழங்குகின்றன.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்: நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. கிவி, குடை மிளகாய், ப்ரோக்கோலி போன்றவற்றிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி, ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

லேசான மற்றும் சமச்சீரான உணவு: மழைக்காலங்களில் தானியங்கள், புரதங்கள், காய்கறிகள் கொண்ட லேசான மற்றும் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த சரிவிகித உணவு பல ஊட்டச்சத்துகளைத் தரும். சிவப்பு அரிசி, குயினோவா(Quinoa) மற்றும் ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்து மற்றும் உடலின் செயல்பாட்டுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. கோழி இறைச்சி, மீன், டோஃபு(tofu) போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதேபோல் காய்கறிகள், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

புரோபயாடிக்ஸ்(Probiotics): தயிர், கேஃபிர்(kefir), ஃபெர்மென்டட் காய்கறிகள் போன்ற புரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோபயாட்டிக் நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை செரிமான மண்டலத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளரச் செய்கின்றன. இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கின்றன.

பூண்டு, வெங்காயம்: மழைக்காலங்களில் பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும். இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதால், மழைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

சூப், ஸ்டியூ: பல வகைக் காய்கறிகள், பருப்பு வகைகள் நிறைந்த சூப் மற்றும் ஸ்டியூ (Stew) உணவுகளை சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு இதமளிப்பதோடு மட்டுமல்ல, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. இவற்றில் காய்கறிகள், இறைச்சி, காளான்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், இந்த சூப், ஸ்டியூக்கள் மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

தெரு உணவுகளைத் தவிர்க்கவும்: மழைக்காலத்தில் தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தெருவோரம் விற்கப்படும் உணவுகள் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், செரிமானப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

முறையான உணவு சேமிப்பு: உணவுகள் கெட்டுப்போவதையும், மாசுபடுவதையும் தடுக்க, உணவுகளை முறையாக சேமித்து வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை காற்றுப் புகாத கன்டெய்னர்களில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும். உணவின் தரத்தை பேணுவதற்கும், பாதுகாப்பாக பராமரிக்கவும் முறையாக சேமிப்பது அவசியம்.

இதையும் படிங்க: சைவ உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு கிடைக்கும் பயன்கள்!

டெல்லி: மழைக்காலத்தில் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல் மழைக்காலத்துக்கு ஏற்ப புதிய ஜங்க் உணவுகளும் கிடைக்கும். இந்தச் சூழலில் நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பின்வரும் உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களைப் பின்பற்றலாம் என ஊட்டச்சத்து நிபுணர் ரோகிணி பாட்டீல் தெரிவித்துள்ளார்.

தண்ணீர்: மழைக்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். குளிர்ச்சியான வானிலை நிலவினாலும், நம் உடலுக்கு நீரேற்றம் தேவைப்படுகிறது. அதனால், ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போதுதான் நம் உடலின் செயல்பாடுகள் சீராக இருக்கும்.

சூடான பானங்கள்: மழைக்காலத்தில் மூலிகை தேநீர், சூப் போன்ற சூடான பானங்களைப் பருக வேண்டும். இவை உடலை சூடாக பராமரிப்பதோடு, உள் உறுப்புகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவும். கிரீன் டீ போன்ற மூலிகை டீக்கள், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் காய்கறிகளால் ஆன சூப்கள், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.

சீசன் பழங்கள்: மழைக்காலங்களில் ஏராளமான பழங்கள் கிடைக்கும். மழைக்காலங்களில் கிடைக்கும் ஆப்பிள், பேரிக்காய், மாதுளை, ஆரஞ்சு பழங்களைச் சாப்பிடலாம். இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, மழைக்கால நோய்கள் வராமல் காக்க உதவும். இந்தப் பழங்கள் உணவில் இயற்கையான இனிப்புச் சுவையை வழங்குகின்றன.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்: நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்த வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. கிவி, குடை மிளகாய், ப்ரோக்கோலி போன்றவற்றிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி, ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

லேசான மற்றும் சமச்சீரான உணவு: மழைக்காலங்களில் தானியங்கள், புரதங்கள், காய்கறிகள் கொண்ட லேசான மற்றும் சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இந்த சரிவிகித உணவு பல ஊட்டச்சத்துகளைத் தரும். சிவப்பு அரிசி, குயினோவா(Quinoa) மற்றும் ஓட்ஸ் போன்றவை நார்ச்சத்து மற்றும் உடலின் செயல்பாட்டுக்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றன. கோழி இறைச்சி, மீன், டோஃபு(tofu) போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. அதேபோல் காய்கறிகள், உடலுக்குத் தேவையான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகின்றன.

புரோபயாடிக்ஸ்(Probiotics): தயிர், கேஃபிர்(kefir), ஃபெர்மென்டட் காய்கறிகள் போன்ற புரோபயாட்டிக் நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோபயாட்டிக் நிறைந்த உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. இவை செரிமான மண்டலத்தில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளரச் செய்கின்றன. இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்கின்றன.

பூண்டு, வெங்காயம்: மழைக்காலங்களில் பூண்டு மற்றும் வெங்காயத்தை உணவில் சேர்க்க வேண்டும். இவை பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதால், மழைக்கால நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் சுவாச நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கும்.

சூப், ஸ்டியூ: பல வகைக் காய்கறிகள், பருப்பு வகைகள் நிறைந்த சூப் மற்றும் ஸ்டியூ (Stew) உணவுகளை சாப்பிடலாம். இவை மழைக்காலத்துக்கு இதமளிப்பதோடு மட்டுமல்ல, அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன. இவற்றில் காய்கறிகள், இறைச்சி, காளான்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால், இந்த சூப், ஸ்டியூக்கள் மழைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.

தெரு உணவுகளைத் தவிர்க்கவும்: மழைக்காலத்தில் தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தெருவோரம் விற்கப்படும் உணவுகள் பல உடல் உபாதைகளை ஏற்படுத்தலாம். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், செரிமானப் பிரச்னைகளைத் தடுப்பதற்கும், வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

முறையான உணவு சேமிப்பு: உணவுகள் கெட்டுப்போவதையும், மாசுபடுவதையும் தடுக்க, உணவுகளை முறையாக சேமித்து வைக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை காற்றுப் புகாத கன்டெய்னர்களில் அடைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும். உணவின் தரத்தை பேணுவதற்கும், பாதுகாப்பாக பராமரிக்கவும் முறையாக சேமிப்பது அவசியம்.

இதையும் படிங்க: சைவ உணவைப் பின்பற்றும் நபர்களுக்கு கிடைக்கும் பயன்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.