ETV Bharat / state

சுமை தூக்கும் தொழிலாளிகள் இருவர் வெட்டி கொலை! - சிவகாசியல் இருவர் வெட்டி கொலை

விருதுநகர்: நள்ளிரவில் சுமை தூக்கும் தொழிலாளிகள் இருவர் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

sivakasi murder
சுமை தூக்கும் தொழிலாளிகள் இருவர் வெட்டிகொலை!
author img

By

Published : Nov 26, 2019, 12:31 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் முருகன் (32), அர்ஜூனன் (33). இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அர்ஜூனன், கார்னேஷன் காலனியிலும், முருகன் நேரு காலனியலும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிவகாசியில் அடுத்தடுத்த பகுதியில் நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாகதான் நடந்துள்ளது என்றும் இந்த கொலையில் இறந்தவர்கள் இருவருமே அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேரையும் ஒரே கும்பல்தான் கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்திலும் முருகனின் மனைவி கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் முருகன் (32), அர்ஜூனன் (33). இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அர்ஜூனன், கார்னேஷன் காலனியிலும், முருகன் நேரு காலனியலும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிவகாசியில் அடுத்தடுத்த பகுதியில் நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாகதான் நடந்துள்ளது என்றும் இந்த கொலையில் இறந்தவர்கள் இருவருமே அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேரையும் ஒரே கும்பல்தான் கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்திலும் முருகனின் மனைவி கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க:

தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்

Intro:விருதுநகர்
25-11-19

சிவகாசியில் நள்ளிரவில் இரண்டு பேர் சரமாரியாக வெட்டி படுகொலை உடலை மீட்டு சிவகாசி நகர் காவல்துறையினர் விசாரணை

Tn_vnr_04_two_person_murder_vis_script_7204885Body:சிவகாசியில் நள்ளிரவில் இரண்டு பேர் சரமாரியாக வெட்டி படுகொலை உடலை மீட்டு சிவகாசி நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள விவேகானந்தர் காலனியைச் சேர்ந்தவர் முருகன் (32). இவர் அந்த பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அருகில் உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (33). இவரும் சுமை தூக்கும் தொழிலாளி இவர்கள் இரண்டு பேரும் இன்று அதிகாலை இறந்த நிலையில் தெருவில் கிடந்த உள்ளனர். அர்ஜுனன் கார்னேஷன் காலணியிலும், முருகன் நேரு காலனியலும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் இருந்துள்ளனர். இன்று அதிகாலை அந்த வழியே சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர் தகவலின் பேரில் அங்கு வந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இந்த கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிவகாசியில் அடுத்தடுத்த பகுதியில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேலும் காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக தான் நடந்துள்ளது என்றும் இந்த கொலையில் இறந்தவர்கள் இருவருமே அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேரையும் ஒரே கும்பல் தான் கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்திலும் முருகனின் மனைவி கொடுத்த தகவலன் படி 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளார் இதன் அடிப்படையிலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் இமானுவேல் ராஜன் அவருடைய தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.