விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர்கள் முருகன் (32), அர்ஜூனன் (33). இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்துவருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை அர்ஜூனன், கார்னேஷன் காலனியிலும், முருகன் நேரு காலனியலும் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் இருவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சிவகாசியில் அடுத்தடுத்த பகுதியில் நடந்த இரண்டு கொலை சம்பவங்கள் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாகதான் நடந்துள்ளது என்றும் இந்த கொலையில் இறந்தவர்கள் இருவருமே அடுத்தடுத்த தெருவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு பேரையும் ஒரே கும்பல்தான் கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்திலும் முருகனின் மனைவி கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேரின் மீது சந்தேகம் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:
தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு - உறவினர்கள் முற்றுகை போராட்டம்