ETV Bharat / state

’திமுக பாதையே வன்முறை பாதைதான்’

விருதுநகர்: அண்ணாவின் மறைவிற்கு பின்பு திமுக எடுத்த பாதையே வன்முறை பாதைதான் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Dec 9, 2020, 7:06 PM IST

rajendra balaji
rajendra balaji

ராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலமைச்சரையும், ஜெயலலிதாவையும் திமுக தலைமை சொல்லியே ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளார். திமுக வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது இன்று நேற்றல்ல. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினும் வன்முறையை முழுமையாக நம்புகிறார்.

இந்திரா காந்தியையே மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கட்சிதான் திமுக. அண்ணாவின் மறைவிற்கு பின்பு திமுக எடுத்த பாதையே வன்முறை பாதைதான். திமுக வரும் தேர்தலில் படுதோல்வி அடையும். அதன் எடுத்துக்காட்டுதான் ராஜபாளையத்தில் நடந்த வன்முறை. திமுகவின் அராஜக போக்கை பார்க்கும் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் பதில் அளிப்பார்கள்.

’திமுக பாதையே வன்முறை பாதைதான்’

2ஜி வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஸ்டாலினை சந்திக்கிறார். அதற்கு ஒரே ஒரு சாட்சியான சாதிக்பாட்சா, அதனை சிபிஐயிடம் கூறிய கொஞ்ச நாட்களிலேயே மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் ஸ்டாலினும் ஆ.ராசாவும்தான். இவர்களுக்கு அதிமுக ஆட்சியை பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே அடிதடி: போலீஸ் தடியடி!

ராஜபாளையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ முதலமைச்சரையும், ஜெயலலிதாவையும் திமுக தலைமை சொல்லியே ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியுள்ளார். திமுக வன்முறை கலாச்சாரத்தை கையில் எடுப்பது இன்று நேற்றல்ல. கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலினும் வன்முறையை முழுமையாக நம்புகிறார்.

இந்திரா காந்தியையே மதுரையில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்த கட்சிதான் திமுக. அண்ணாவின் மறைவிற்கு பின்பு திமுக எடுத்த பாதையே வன்முறை பாதைதான். திமுக வரும் தேர்தலில் படுதோல்வி அடையும். அதன் எடுத்துக்காட்டுதான் ராஜபாளையத்தில் நடந்த வன்முறை. திமுகவின் அராஜக போக்கை பார்க்கும் பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் பதில் அளிப்பார்கள்.

’திமுக பாதையே வன்முறை பாதைதான்’

2ஜி வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஸ்டாலினை சந்திக்கிறார். அதற்கு ஒரே ஒரு சாட்சியான சாதிக்பாட்சா, அதனை சிபிஐயிடம் கூறிய கொஞ்ச நாட்களிலேயே மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய தற்கொலைக்கு காரணம் ஸ்டாலினும் ஆ.ராசாவும்தான். இவர்களுக்கு அதிமுக ஆட்சியை பற்றியோ, எடப்பாடி பழனிசாமி பற்றியோ பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: திமுக - அதிமுக இடையே அடிதடி: போலீஸ் தடியடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.