ETV Bharat / state

'குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது' - கி. வீரமணி குற்றச்சாட்டு!

author img

By

Published : Nov 17, 2019, 9:51 AM IST

விருதுநகர்: குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது, அதன் முன்னோட்டம் தான் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ki-veeramani

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அதன் பொன்விழா தொடக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இந்த தொடக்க விழா மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பொன் விழா தொடக்க மாநாட்டில் பேசிய கி வீரமணி, ' திராவிடர் கழகத்தினர் லஞ்சம் வாங்கிக்கொண்டோ ஊழல் செய்துவிட்டோ சிறைக்குச் செல்லவில்லை. மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலைக்கு சென்றவர்கள் நாங்கள்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ' குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை திட்டம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தல் முறை ஏலம் போல நடைபெற்று வருகிறது' என விமர்சனம் செய்தார்.

'நீட் தேர்வை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூற வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு என்பது பெருகிக் கொண்டேதான் செல்கிறது. ஊழலை ஒழிக்க நீட்தேர்வு கொண்டு வந்தோம் என்றனர். நீட் தேர்வு ஊழலை ஒழித்து உள்ளதா?' என வீரமணி கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியபோது...

'தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏது? கட்டடம் தான் உள்ளது. வெற்றிடம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் 35 தடவை நாட்டு நலனுக்காக சிறை சென்றவர்களா? நன்றாகப் பாடுவர்களை ரசிக்க முடியும். அதற்காக அவர்களைப் பிரதமராக்க முடியுமா?' என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவரும் ஐஐடி’ - கி.வீரமணி குற்றச்சாட்டு

விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அதன் பொன்விழா தொடக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டார். இந்த தொடக்க விழா மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திராவிடர் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தப் பொன் விழா தொடக்க மாநாட்டில் பேசிய கி வீரமணி, ' திராவிடர் கழகத்தினர் லஞ்சம் வாங்கிக்கொண்டோ ஊழல் செய்துவிட்டோ சிறைக்குச் செல்லவில்லை. மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலைக்கு சென்றவர்கள் நாங்கள்' என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ' குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை திட்டம் உள்ளது. தற்போது நடக்கும் தேர்தல் முறை ஏலம் போல நடைபெற்று வருகிறது' என விமர்சனம் செய்தார்.

'நீட் தேர்வை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்நாடு அரசு கூற வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கு என்பது பெருகிக் கொண்டேதான் செல்கிறது. ஊழலை ஒழிக்க நீட்தேர்வு கொண்டு வந்தோம் என்றனர். நீட் தேர்வு ஊழலை ஒழித்து உள்ளதா?' என வீரமணி கேள்வி எழுப்பினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியபோது...

'தமிழ்நாட்டில் வெற்றிடம் ஏது? கட்டடம் தான் உள்ளது. வெற்றிடம் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் 35 தடவை நாட்டு நலனுக்காக சிறை சென்றவர்களா? நன்றாகப் பாடுவர்களை ரசிக்க முடியும். அதற்காக அவர்களைப் பிரதமராக்க முடியுமா?' என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’ஐயர், ஐயங்கார் இன்ஸ்டிடியூடாக மாறிவரும் ஐஐடி’ - கி.வீரமணி குற்றச்சாட்டு

Intro:விருதுநகர்
17-11-19

குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது அதன் முன்னோட்டம் தான் நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை திட்டம் - திராவிட கழக தலைவர் கி.விரமணி சாடல்

Tn_vnr_01_ki_veeramani_speech_vis_script_7204885Body:விருதுநகரில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அதன் பொன்விழா தொடக்க மாநாடு நடைபெற்றது. இந்த பொன் விழா தொடக்க மாநாட்டில் திராவிட கழக தலைவர் கி.விரமணி கலந்து கொண்டார். இந்த தொடக்க விழா மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த பொன் விழா தொடக்க மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திராவிட கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பொன் விழா தொடக்க மாநாட்டில் பேசிய கி.விரமணி திராவிட கழகத்தினர் லஞ்சம் வாங்கிக்கொண்டோ ஊழல் செய்துவிட்டோ சிறைக்குச் செல்லவில்லை மக்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு சிறைச்சாலைக்கு சென்றவர்கள் நாங்கள் என்றார். காவல்துறையினரின் மதிப்பை குறைக்க கூடாது. யார் ஆட்சிக்கு வந்தாலும் காவல்துறையினரை நம்பி தான் இருக்க வேண்டும். காவல் துறையினரின் கட்டுப்பாட்டை போல் உள்ளது தான் கருச் சட்டை காவல் படை. இன்று நாட்டில் அரசியலமைப்பின் சட்டத்தின் படி ஆட்சி நடைபெறவில்லை மனுதர்ம ஆட்சிதான் நடைபெறுகிறது என குற்றம்சாட்டினார்.
குலக்கல்வி திட்டம் மீண்டும் வரப்போகிறது அதன் முன்னோட்டம் தான் நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக்கொள்கை திட்டம் என்றார். தற்போது நடக்கும் தேர்தல் முறை ஏலம் போல நடைபெற்று வருகிறது. ஏலம் என்ற கோலம் தேர்தல் காலம் என விமர்சனம் செய்தார். சமஸ்கிருஸ்தம் படித்தால் என்ன லாபம் என கேள்வி எழுப்பிய வீரமணி கலைஞர் பாடுபட்டு உருவாக்கிய செம்மொழி நிறுவனம் தினக்கூலி நிறுவனமாக மாற்றப்பட்டு உள்ளது என குற்றம் சாட்டினார். நமது பிரதமர் அழகா வித்தை காட்டுவர் வித்தையில் பெரிய வித்தை மோடி வித்தை கேலி செய்தார்.
தமிழக அரசு இரட்டை வேடம் போட கூடாது நீட் தேர்வை கொள்கையளவில் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தமிழக அரசு கூற வேண்டும். மேலும் தனியார் துறையிலும் இட ஒதுக்கிடு வேண்டும். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் வழக்கு என்பது பெருகி கொண்டே தான் செல்கிறது. ஊழலை ஒழிக்க நீட் தேர்வு கொண்டு வந்தோம் நீட் தேர்வு ஊழலை ஒழித்து உள்ளதா என வீரமணி கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் வெற்றிடம் ஏது கட்டிடம் தான் உள்ளது வெற்றிடம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் 35 தடவை நாட்டு நலனுக்காக சிறை சென்றவர்களா???? நல்ல பாடுவர்களை ரசிக்க முடியும் அதற்க்காக அவர்களை பிரதமராக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.