ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 60 நாள்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் விருதுநகரில் தீயணைப்புத் துறை அலுவலகத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.
இதில் தீயணைப்புத் துறை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவுறுத்தலின்படி, தென் மண்டல துணை இயக்குனர் சரவண குமார் வழிகாட்டுதலில்
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் முன்னிலையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினரின் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் குழந்தைகளில் 5 முதல் 10 வயதுவரை ஒரு பிரிவினருக்கும், 10 முதல் 15 வயதுவரை மற்றொரு பிரிவினருக்கும் போட்டி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாணவ மாணவிகளால் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வரைபடங்கள் வரையப்பட்டன. மேலும் இதில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கான கரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியப்போட்டி!