விழுப்புரம்: காகுப்பம் சாலையில் அமைந்துள்ள நாவலர் வீதியில் ராஜசேகர் - விஜயா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி, ஜோதி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகள் ராமலட்சுமி திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார்.
இவரின் இரண்டாவது மகளான ஜோதி(21), விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ., வரலாறு முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (பிப்.4) காலை ராஜேசேகர் தனது மனைவி விஜயாவுடன் வெளியே சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த ஜோதி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விழுப்புரம் நகர காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த கல்லூரி மாணவி ஜோதியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, விழுப்புரம் நகரக் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி ஜோதி தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் திருமண ஏற்பாடு செய்வதில் பெற்றோருடன் ஜோதி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே மனமுடைந்து கல்லூரி மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் தகவல் தெரிவித்தனர்.
![தற்கொலை முடிவு எதற்கும் தீர்வல்ல..](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17668434_thumvllr.jpg)
கல்லூரி மாணவி ஜோதி உயிரிழக்கும்போது அங்கிருந்தவர்களால் செல்போனில் எடுத்த வீடியோவை சிலர் இணையத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: Vani Jayaram: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்!