தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயித்து மதுவிற்பனை செய்துவருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. தீபாவளியை மதுபிரியர்கள் டாஸ்மாக் கடைகளில் கொண்டாடியதால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி தீவிர மதுவிற்பனை நடைபெற்றது. தீபாவளி நாளன்றும், மறுநாள் திங்கள்கிழமை இந்த இரண்டு நாட்களில் மட்டும் வேலூர் மாவட்டத்தில் ரூ.12.50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 187 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் மதுபான வகைகளைப் பொறுத்தவரை பீர் பாட்டில்கள் மட்டும் மொத்தம் ஏழாயிரம் பெட்டிகளும் மற்றும் விஸ்கி, ரம் என பிற மதுபான வகைகள் ஒன்பது ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆகியிருப்பதாக டாஸ்மாக் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்!