ETV Bharat / state

நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம்!

author img

By

Published : Nov 20, 2019, 2:15 PM IST

விழுப்புரம்: சிலைக் கடத்தல் வழக்கில் அமைச்சர்களை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக, நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் கோபால் இன்று திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

nakkeran gopal

நக்கீரன் புலனாய்வு இதழில் சிலைக் கடத்தல் சம்பந்தமாக செய்தி வெளியிட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி, திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் மீது புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து ஆகஸ்ட் 19ஆம் தேதி அமைச்சர் சி.வி. சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி நளினிதேவி முன்பு நேரில் ஆஜராகி, தன் மீதான அவதூறு செய்தி வெளியிட்டது குறித்து நீதிபதியிடம் விளக்கிக் கூறினார்.

அவர் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில், நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகிய நக்கீரன் கோபால்

இதனையடுத்து, இன்று நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நக்கீரன் புலனாய்வு இதழில் சிலைக் கடத்தல் சம்பந்தமாக செய்தி வெளியிட்டது தொடர்பாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி, திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் மீது புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து ஆகஸ்ட் 19ஆம் தேதி அமைச்சர் சி.வி. சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் இரண்டில் நீதிபதி நளினிதேவி முன்பு நேரில் ஆஜராகி, தன் மீதான அவதூறு செய்தி வெளியிட்டது குறித்து நீதிபதியிடம் விளக்கிக் கூறினார்.

அவர் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில், நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகிய நக்கீரன் கோபால்

இதனையடுத்து, இன்று நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Intro:விழுப்புரம்: சிலை கடத்தல் வழக்கில் அமைச்சர்களை தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் வார இதழின் ஆசிரியர் கோபால் இன்று திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.Body:நக்கீரன் வார இதழில் சிலை கடத்தல் சம்பந்தமாக செய்தி வெளியிட்டது தொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதரன், பிரகாஷ் ஆகியோர் மீது புகார் மனு அளித்திருந்தார்.

இதையடுத்து ஆகஸ்ட் 19ம் தேதி அமைச்சர் சி.வி சண்முகம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் 2ல் நீதிபதி நளினிதேவி முன்பு நேரில் ஆஜராகி தன் மீதான அவதூறு செய்தி வெளியிட்டது குறித்து நீதிபதியிடம் விளக்கி கூறினார்.

அவர் கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்&1ல் நேரில் ஆஜராக நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதிரன் மற்றும் பிரகாஷ் ஆகியோருக்கு உத்தர விடப்பட்டது.


நேரில் ஆஜராகவில்லையென்றால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதனை அடுத்து இன்று நக்கீரன் ஆசிரியர் கோபால், தலைமை நிருபர் தாமோதிரன், பிரகாஷ் ஆகியோர் திண்டிவனம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்&1ல் நேரில் ஆஜரானார்.


Conclusion:இதையடுத்து இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

(இந்த செய்திக்கான வீடியோ மெயில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.