விழுப்புரம் மாவட்டத்தில் ஜூன் மாத தொடக்கத்திலிருந்து குறைந்திருந்த கரோனா தாக்கம், கடந்த 12ஆம் தேதிமுதல் மீண்டும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் ஒரேநாளில் 27 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை ஏழு பேர் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா பாதிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.