ETV Bharat / state

மகன் வாங்கிய கடனுக்காக வெட்டு வாங்கிய தந்தை பலி!

author img

By

Published : Oct 7, 2019, 3:08 PM IST

வேலூர்: மகன் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத தந்தையை வழிமறித்து வெட்டிக் கொன்ற அடையாளம் தெரியாத நபர்கள்.

மகன் வாங்கிய கடனுக்காக உயிரிழந்த தந்தை


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ரகு(52 ). இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது மகன் தனசேகர் அதே பகுதியில் ஃபைனான்ஸ் நடத்தி வருபவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஐந்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை.

மகன் வாங்கிய கடனுக்காக உயிரிழந்த தந்தை

இதையடுத்து பணம் கொடுத்த நபர் தனசேகரின் தந்தை ரகுவை தொடர்புகொண்டு கடனை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரும் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஃபைனான்ஸ் நடத்தி வருபவருக்கும், ரகு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடித்துவிட்டு ரகு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செவிடாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென்று அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் ரகுவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

பின்பு, ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட சத்துவாச்சாரி காவல் நிலையத்தினர், அப்பகுதியில் வசிப்பவர்களிடமும், ரகுவின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். பணத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்தது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் இருவருக்கும் அரிவாள் வெட்டு!


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வ.உ.சி. நகரைச் சேர்ந்தவர் ரகு(52 ). இவர் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களது மகன் தனசேகர் அதே பகுதியில் ஃபைனான்ஸ் நடத்தி வருபவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ஐந்தாயிரம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை.

மகன் வாங்கிய கடனுக்காக உயிரிழந்த தந்தை

இதையடுத்து பணம் கொடுத்த நபர் தனசேகரின் தந்தை ரகுவை தொடர்புகொண்டு கடனை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவரும் பணத்தைக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக ஃபைனான்ஸ் நடத்தி வருபவருக்கும், ரகு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு வேலை முடித்துவிட்டு ரகு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செவிடாத்தம்மன் கோயில் அருகே சென்றபோது திடீரென்று அங்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் ரகுவை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.

பின்பு, ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார். இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட சத்துவாச்சாரி காவல் நிலையத்தினர், அப்பகுதியில் வசிப்பவர்களிடமும், ரகுவின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர். பணத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்தது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க : முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் இருவருக்கும் அரிவாள் வெட்டு!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூரில் பரிதாபம்- மகன் வாங்கிய கடனுக்காக தந்தை வெட்டிக் கொலை

போலீசார் விசாரணைBody:வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகரை சேர்ந்தவர் ரகு (வயது 52 ). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி மலர்விழி. இவர்களுக்கு தனசேகர் (29) என்கிற மகன் உள்பட இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். தனசேகர் அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வருபவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரூபாய் 5 ஆயிரம் கடனாக பெற்றதாகவும், பணம் பெற்று சில மாதங்கள் ஆகியும் வட்டியுடன் அதனை தனசேகர் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது இதையடுத்து பணம் கொடுத்த நபர் தனசேகரின் தந்தை ரகுவை தொடர்புகொண்டு பணத்தை தரும்படி கூறி உள்ளார். ஆனால் அவரும் பணத்தை கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. அதன் காரணமாக பைனான்ஸ் நடத்தி வருபவருக்கும், ரகு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு டீக்கடையில் வேலை முடித்து விட்டு ரகு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வீட்டிற்கு செல்லும் வழியில் உள்ள செவிடாத்தம்மன் கோவில் அருகே சென்றபோது திடீரென்று அங்கு வந்த 2 மர்மநபர்கள் கத்தியால் ரகுவை சரமாரியாக குத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்தார். அதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ரகுவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த கொலை குறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் ரகுவின் குடும்பத்தினரிடம் விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பணத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து கொலை செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.