ETV Bharat / state

ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கால தாமதமானது - ஜி.கே. வாசன்

author img

By

Published : Apr 11, 2023, 1:17 PM IST

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு ஆளுநர் தடை விதித்திருப்பது தாமதம் இல்லை என்று கூற முடியாது, தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு நன்றி என தமாக தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.

Etv Bharat
Etv Bharat
ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கால தாமதமான ஒன்று - ஜி.கே. வாசன்

வேலூர்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது, ”ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களின் அவசியம் உள்ள சில சட்டத்திற்குக் கால தாமதம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்குக் கால தாமதம் ஆனதற்கு ஆளுநர் மாளிகையும் தமிழக அரசும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

தற்போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதைத் தாமதம் என்று கூறாமல் இருக்க முடியாது, த.மா.க சார்பாக ஆளுநருக்கு நன்றி தெரிவித்து வரவேற்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தை வரும் காலத்தில் முற்றிலுமாக தடை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துப் பலியாகும் உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கிறது, விவசாய நிலங்களில் அக்கறையுள்ள அரசு மத்திய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாய் உள்ளது.

பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது கறுப்புக்கொடி காட்டியது தேவையற்றது. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கான நேரமும் இது இல்லை என்று செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

ஆன்லைன் ரம்மிக்கு தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது கால தாமதமான ஒன்று - ஜி.கே. வாசன்

வேலூர்: குடியாத்தம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது, ”ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. மக்களின் அவசியம் உள்ள சில சட்டத்திற்குக் கால தாமதம் இல்லாமல் ஒப்புதல் அளிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்குக் கால தாமதம் ஆனதற்கு ஆளுநர் மாளிகையும் தமிழக அரசும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை.

தற்போது ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதைத் தாமதம் என்று கூறாமல் இருக்க முடியாது, த.மா.க சார்பாக ஆளுநருக்கு நன்றி தெரிவித்து வரவேற்கிறோம். ஆன்லைன் சூதாட்டத்தை வரும் காலத்தில் முற்றிலுமாக தடை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துப் பலியாகும் உயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்படாது என மத்திய அரசு அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு மத்திய அரசு என்றும் துணை நிற்கிறது, விவசாய நிலங்களில் அக்கறையுள்ள அரசு மத்திய அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாய் உள்ளது.

பிரதமர் மோடி தமிழ்நாடு வரும் போது கறுப்புக்கொடி காட்டியது தேவையற்றது. அதை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கான நேரமும் இது இல்லை என்று செய்தியாளர்களிடம் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "சட்டசபைக்கு நான்தான் தலைவர், அதற்கு பெயர் தான் அவை முன்னவர்" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.