ETV Bharat / state

கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை... திருமணம் மீறிய உறவுதான் காரணமா?

author img

By

Published : Feb 8, 2020, 5:01 PM IST

வேலூர்: சலவன்பேட்டையைச் சேர்ந்த ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வெளியே கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

murder-in-vellore happened infront of Temple
murder-in-vellore happened infront of Temple

வேலூர் மாவட்டத்தை அடுத்த சலவன்பேட்டைப் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (43). கட்டடத் தொழிலாளியான இவர் தினமும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

இன்றும் வழக்கம் போல் முருகவேல் ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முருகவேலை செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து அவர் அவசர அவசரமாக கோயிலுக்கு வெளியே வந்தபோது அந்த நபருக்கும் முருகவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை சரமாரியாக குத்திவிட்டு, தப்பியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முருகவேல் பணிபுரிந்த இடத்தில், அவர் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் கணவர்தான் முருகவேலை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

வேலூர் மாவட்டத்தை அடுத்த சலவன்பேட்டைப் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (43). கட்டடத் தொழிலாளியான இவர் தினமும் தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

இன்றும் வழக்கம் போல் முருகவேல் ஆணைக்குளத்தம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முருகவேலை செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து அவர் அவசர அவசரமாக கோயிலுக்கு வெளியே வந்தபோது அந்த நபருக்கும் முருகவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை சரமாரியாக குத்திவிட்டு, தப்பியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகவேல், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டடத் தொழிலாளி குத்திக் கொலை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் முருகவேல் பணிபுரிந்த இடத்தில், அவர் பெண் ஒருவருடன் திருமணம் மீறிய உறவில் இருந்ததாகவும், அந்த பெண்ணின் கணவர்தான் முருகவேலை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: கொலை செய்த காட்சியை சமூக வலைதளங்களில் பரப்பிய கொடூரம்!

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் அருகே கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி கொலை

கள்ளக் காதல் விவகாரமா? போலீசார் தீவிர விசாரணைBody:வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த சலவன்பேட்டைபகுதியை சேர்ந்தவர் முருகவேல் (43). கட்டிடத் தொழிலாளியான இவர் தினமும் தனது வீட்டு அருகில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம் வழக்கம் போல் இன்றும் முருகவேல் ஆணைக்குளத்தம்மன் கோவிலுக்கு வந்துள்ளார் அப்போது மர்ம நபர் ஒருவர் முருகவேலை செல்போனில் அழைத்துள்ளார் இதையடுத்து அவர் அவசரஅவசரமாக கோவிலுக்கு வெளியே வந்தபோது அந்த நபருக்கும் முருகவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது ஒரு கட்டத்தில் அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகவேலை சரமாரியாக குத்தியுள்ளார் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதற்கிடையில் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் தகவல் அறிந்து வேலூர் தெற்கு காவல் அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் முருகவேல் பணிபுரிந்த இடத்தில் பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த பெண்ணின் கணவர் தான் முருகவேலை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர் இந்த கொலை சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.