ETV Bharat / state

மும்முனை இணைப்பு- லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது - arrest

வேலூர்: வீட்டிற்கு மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

சரவணன்
author img

By

Published : May 18, 2019, 12:17 PM IST

வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு பெறுவதற்காகவும், பழைய மீட்டரை மாற்றவும் வாலாஜா மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளரான சரவணன் மும்முனை இணைப்பு கொடுக்க லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தன்னிடம் பணம் இல்லை என்றும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் தந்தால் மட்டுமே மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும் என சரவணன் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்ற பாலாஜி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூறிய ஆலோசனைப்படி மீண்டும் சரவணனை தொடர்புகொண்டு தன்னால் ரூ. 2500 மட்டுமே கொடுக்க முடியும் என கூறியுள்ளார். அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அவரும் அந்த பணத்தை மின்வாரிய ஆய்வாளரான சரவணனிடம் கொடுக்க முற்பட்டபோது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு பெறுவதற்காகவும், பழைய மீட்டரை மாற்றவும் வாலாஜா மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய வணிக ஆய்வாளரான சரவணன் மும்முனை இணைப்பு கொடுக்க லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு பாலாஜி தன்னிடம் பணம் இல்லை என்றும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தரமுடியும் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் லஞ்சம் தந்தால் மட்டுமே மும்முனை மின்சார இணைப்பு வழங்கப்படும் என சரவணன் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மறுநாள் வருவதாக கூறிவிட்டு சென்ற பாலாஜி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூறிய ஆலோசனைப்படி மீண்டும் சரவணனை தொடர்புகொண்டு தன்னால் ரூ. 2500 மட்டுமே கொடுக்க முடியும் என கூறியுள்ளார். அதற்கு அவரும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்துள்ளனர். அவரும் அந்த பணத்தை மின்வாரிய ஆய்வாளரான சரவணனிடம் கொடுக்க முற்பட்டபோது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது


Body:வேலூர் மாவட்டம் வாலாஜா அருகே அனந்தலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி இவர் தனது வீட்டில் மும்முனை மின் இணைப்பு பெறுவது மற்றும் பழைய மீட்டரை மாற்றி அமைப்பது தொடர்பாக வாலாஜா நகர மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளார் அப்போது மின்வாரிய வணிக ஆய்வாளர் சரவணன் மின் இணைப்பு வழங்க பாலாஜியிடம் லஞ்சம் கேட்டுள்ளார் அதற்கு பாலாஜி என்னிடம் பணம் குறைவாகவே உள்ளது எனவே அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே தரமுடியும் என்றுள்ளார் ஆனால் வணிக ஆய்வாளர் சரவணன் லஞ்சம் தந்தால் மட்டுமே வேலை நடக்கும் என்று எச்சரித்துள்ளார் இதையடுத்து பாலாஜி விஜிலென்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில் லஞ்சம் தர பாலாஜி ஒப்புக் கொண்டுள்ளார் அதன்படி 9500 ரூபாய் தொகையை சரவணன் கேட்டுள்ளார் அதில் மின்வாரிய கட்டணம் கழித்தது போக 2380 சரவணன் லஞ்சமாக கேட்டுள்ளார் இந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி பாலாஜி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வணிக ஆய்வாளர் சரவணனிடம் கொடுத்துள்ளார் இதை மறைந்திருந்து பார்த்த விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து சரவணனை கைது செய்தனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.