ETV Bharat / state

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடத்தப்பட்டு சித்ரவதை! - வேலூர்

வேலூர்: திருப்பத்தூர் அருகே ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கடத்தி சித்தரவதை செய்த மூவரை காவல் துறையினர் தீவரமாக தேடிவருகின்றனர்.

வேலூர்
author img

By

Published : Aug 12, 2019, 10:26 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்தலி அடுத்த சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (35). இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு இவர் கந்தலி பகுதியிலிருந்து நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி, ரமேஷ் மற்றும் திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து முனியப்பனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அவரை திருப்பத்தூர் அருகேயுள்ள கிடங்கு ஒன்றில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனையறிந்த முனியப்பனின் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணேசன் முனியப்பனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடத்தி சித்தரவதை

இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரிக்கையில் மணி, ரமேஷ் இருவருக்கும் முனியப்பனுடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே காவல் துறையினர் தலைமறைவாகியுள்ள கார்த்தி, ரமேஷ், மணி ஆகியேரைத் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்தலி அடுத்த சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (35). இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்துவருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு இவர் கந்தலி பகுதியிலிருந்து நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவமனையின் நுழைவுவாயில் அருகில் வந்து கொண்டிருந்தார். அப்போது, சொக்கனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி, ரமேஷ் மற்றும் திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி ஆகிய மூவரும் சேர்ந்து முனியப்பனை தாக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளனர்.

பின்னர் அவரை திருப்பத்தூர் அருகேயுள்ள கிடங்கு ஒன்றில் வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதனையறிந்த முனியப்பனின் சக ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கணேசன் முனியப்பனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கடத்தி சித்தரவதை

இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் துறையினர் விசாரிக்கையில் மணி, ரமேஷ் இருவருக்கும் முனியப்பனுடன் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது தெரியவந்தது. எனவே காவல் துறையினர் தலைமறைவாகியுள்ள கார்த்தி, ரமேஷ், மணி ஆகியேரைத் தேடி வருகின்றனர்.

Intro:
திருப்பத்தூர் அருகே 108 அவசர வாகன ஓட்டுநரை கடத்தி கிடங்கில் வைத்து சித்ரவதை செய்த 3 பேருக்கு திருப்பத்தூர் காவல்துறையினர் வலை வீச்சு.


Body: வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்தலி அடுத்த சொக்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், முனியப்பன் (35) இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 108 அவசர வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று இரவு கந்தலி பகுதியிலிருந்து நோயாளியை 108 வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக அனுமதித்த பின்னர் ,மெயின் கேட் அருகில் முனியப்பன் வந்து கொண்டிருந்த போது,

சொக்கனாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மணி ,ரமேஷ் இருவருக்கும் முனியப்பனிடம் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது, இதனால் முனியப்பனை திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி என்பவர்களுடன் சேர்ந்து ரமேஷ், மணி ஆகியோர் முனியப்பனை கடுமையாக தாக்கி ஆட்டோவில் தூக்கிச்சென்று திருப்பத்தூர் அருகே உள்ள கிடங்கில் வைத்து சித்ரவதை செய்து கடுமையாக தாக்கியுள்ளனர்.




Conclusion: பின்னர் இது குறித்து தகவலறிந்த முனியப்பனின் சக ஓட்டுநர் கணேசன் முனியப்பனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

மேலும் இது குறித்து கணேசன் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார்

புகாரின் பேரில் காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள கார்த்தி, ரமேஷ் மற்றும் கணேசனை தேடி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.