ETV Bharat / state

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி? - அமைச்சர் கே.சி. வீரமணி உளறல்!

author img

By

Published : Nov 16, 2019, 6:03 PM IST

வேலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதாக அமைச்சர் கே.சி. வீரமணி உளறியிருப்பது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

veeramani

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை பிரபலம்.

இதையும் படிங்க: மீண்டும் உளறி சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் - அதிமுகவினர் அதிருப்தி

அந்த வரிசையில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவை விமர்ச்சிப்பதாக நினைத்து எதையோ ஒன்றை கூற, அது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வேலூர் மாவட்ட நூலக அலுவலகத்தில் இன்று தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரதிபலித்துள்ளதாகவும், ஏனென்றால் கடந்த தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுகதான் வெற்றி பெற்றார்கள் எனவும் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் உளறிய அமைச்சர்

அப்போது திமுக கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதை சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது என்றும் கூறினார். அதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது இதைத்தான் அமைச்சர் வீரமணி தவறுதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறி முடித்ததும் அருகிலிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் காஷ்மீர் அல்ல கன்னியாகுமரி என்று அவருக்கு எடுத்துக் கூறினார். அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. இதையும் அமைச்சர் வீரமணி தவறுதலாக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரதிபலித்துள்ளதாகக் கூறியிருந்தார். அமைச்சரின் இதுபோன்ற உளறல் பேச்சு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அலுவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செய்தியாளர்களிடம் உளறிய அமைச்சர் -பரபரப்பு

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அமைச்சர்கள் பலர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும்போதும் சரி அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சரி பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரங்களில் எக்குத்தப்பாக வாயை கொடுப்பதையும் சர்ச்சையில் சிக்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை பிரபலம்.

இதையும் படிங்க: மீண்டும் உளறி சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் - அதிமுகவினர் அதிருப்தி

அந்த வரிசையில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது திமுகவை விமர்ச்சிப்பதாக நினைத்து எதையோ ஒன்றை கூற, அது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது வேலூர் மாவட்ட நூலக அலுவலகத்தில் இன்று தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்துகொண்டு புத்தகக் கண்காட்சியை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நிலைப்பாட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரதிபலித்துள்ளதாகவும், ஏனென்றால் கடந்த தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுகதான் வெற்றி பெற்றார்கள் எனவும் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் உளறிய அமைச்சர்

அப்போது திமுக கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதை சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது என்றும் கூறினார். அதாவது, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது இதைத்தான் அமைச்சர் வீரமணி தவறுதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

அவர் இவ்வாறு கூறி முடித்ததும் அருகிலிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் காஷ்மீர் அல்ல கன்னியாகுமரி என்று அவருக்கு எடுத்துக் கூறினார். அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. இதையும் அமைச்சர் வீரமணி தவறுதலாக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரதிபலித்துள்ளதாகக் கூறியிருந்தார். அமைச்சரின் இதுபோன்ற உளறல் பேச்சு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், அலுவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: செய்தியாளர்களிடம் உளறிய அமைச்சர் -பரபரப்பு

Intro:வேலூர் மாவட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றதா? அமைச்சர் கே.சி.வீரமணி உளறல்Body:அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் பல்வேறு விஷயங்களில் சர்ச்சைக்குரிய வகையிலும் உளறும் வகையிலும் பேசி வருகின்றனர் குறிப்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணையில் தெர்மாகோல் விட்ட சம்பவம் நெட்டிசன்கள் முதல் சீனியர் சிட்டிசன்கள் வரை நகைப்பலையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது அதேபோல் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட பல்வேறு அமைச்சர்கள் பொது இடங்களில் உளறி வருகின்றனர் இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் தமிழக பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக கூறி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதாவது வேலூர் மாவட்ட நூலக அலுவலகத்தில் இன்று தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது இதில் தமிழக பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே சி வீரமணி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை தூக்கி வைத்து விழாவில் பேசினார் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர் அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாட்டை நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரதிபலித்துள்ளது ஏனென்றால் கடந்த தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக தான் வெற்றி பெற்றார்கள் அவர்கள் அப்போது கொடுத்த வாக்குறுதியை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதை சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது என்று கூறினார் அதாவது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது இதைத்தான் அமைச்சர் வீரமணி தவறுதலாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை திமுக வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளார் அவர் இவ்வாறு கூறி முடித்ததும் அருகிலிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் காஷ்மீர் அல்ல கன்னியாகுமரி என்று அவருக்கு எடுத்துக் கூறினார் அதேபோல் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது இதையும் அமைச்சர் வீரமணி தவறுதலாக நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பிரதிபலித்துள்ளதாக கூறியிருந்தார் அமைச்சரின் இதுபோன்ற உளறல் பேச்சு அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.