ETV Bharat / state

ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்யமாட்டோம்: ஏ.சி. சண்முகம்

வேலூர்: ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம், மக்களிடம் அனுதாபம் பெறுவதற்காக தங்கள் மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jul 20, 2019, 6:43 PM IST

AC

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேலூர் சைதாப்பேட்டை பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துரைமுருகன் மகனை லாரி ஏற்றிக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறுகிறார்கள்.

உங்களோடு இருந்தவர்கள் அந்த சதியில் ஈடுபட்டார்களா? அல்லது நீங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தீர்களே அவர்கள் அதில் ஈடுபட்டார்களா? அல்லது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள்; உங்களால் பழிவாங்கப்பட்டவர்கள் யாராவது இதனை செய்தார்களா என்று நீங்கள்தான் கண்டறிய வேண்டும்.

ஏசி சண்முகம் பேட்டி

குற்றம் சுமத்துவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? எதற்கு கற்பனையாக சொல்கிறீர்கள். மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக துரைமுருகன் சொல்கிறார். எங்களைப் பொறுத்தவரை ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம்.

ஏற்கனவே, பணம் பதுக்கல் பிரச்னையில் தன்னுடன் இருந்தவர்களே காட்டிக் கொடுத்தார்கள் என்று துரைமுருகன் சொன்னார். ஆகவே, இந்த சதியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் காவல் துறையிடம் புகார் கொடுங்கள்.

தேவையற்ற அனுதாபங்களைத் தவிர்த்து மக்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளைக் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேலூர் சைதாப்பேட்டை பகுதிகளில் திறந்தவேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "துரைமுருகன் மகனை லாரி ஏற்றிக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கூறுகிறார்கள்.

உங்களோடு இருந்தவர்கள் அந்த சதியில் ஈடுபட்டார்களா? அல்லது நீங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தீர்களே அவர்கள் அதில் ஈடுபட்டார்களா? அல்லது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள்; உங்களால் பழிவாங்கப்பட்டவர்கள் யாராவது இதனை செய்தார்களா என்று நீங்கள்தான் கண்டறிய வேண்டும்.

ஏசி சண்முகம் பேட்டி

குற்றம் சுமத்துவதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? எதற்கு கற்பனையாக சொல்கிறீர்கள். மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக துரைமுருகன் சொல்கிறார். எங்களைப் பொறுத்தவரை ஈ, எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம்.

ஏற்கனவே, பணம் பதுக்கல் பிரச்னையில் தன்னுடன் இருந்தவர்களே காட்டிக் கொடுத்தார்கள் என்று துரைமுருகன் சொன்னார். ஆகவே, இந்த சதியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் காவல் துறையிடம் புகார் கொடுங்கள்.

தேவையற்ற அனுதாபங்களைத் தவிர்த்து மக்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளைக் கேட்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Intro:வேலூர் தேர்தலில் பரிதாபத்தை ஏற்படுத்த துரைமுருகன் மருத்துவமனையில் படுக்கக்கூட தயார் - பிரச்சாரத்தில் ஏசி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு
Body:வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் இன்று வேலூர் சைதாப்பேட்டை பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தார் அப்போது அவர் பேசுகையில், இது பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அல்ல. அந்த வாய்ப்பை வேலூர் மக கள் இழந்து விட்டனர். அதற்கு காரணம், திமுக பொருளாளர் துரைமுருகன் தான் காரணம். அவர் பணம் பதுக்கியதால் தேர்தல் நின்று விட்டது. எனவே மீண்டும் அதே வேட்பாளரை களம் இறக்கியுள்ளனர். இந்த தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இதுவரை திமுக வேட்பாளர், நாங்கள் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என கூறியுள்ளார்களா? நான் தேர்தல் ரத்து செய்த பிறகும் ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகிறேன். குறிப்பாக எனது மருத்துவமனையில் 200 பேருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்துள்ளோம். ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். ஆனால் திமுக வேட்பாளர் எந்த வாக்குறுதியாவது கொடுத்தார்களா? துரைமுருகன் மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கூறுகிறார்கள். நாங்கள் எறும்புக்கு கூட துரோகம் செய்யமாட்டோம். திமுகவினர் கூட சொன்னார்கள், வாக்கு பரிதாபம் பெறுவதற்காக துரைமுருகன் கடைசி நேரத்தில் மருத்துவமனையில் படுத்தாலும் படுப்பார். எனவே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நாடகம் ஆட வேண்டும் மக்கள் மத்தியில் தொண்டர்கள் மத்தியில் அழ வேண்டும். பரிதாபத்தை தேடி வாக்குகளை வாங்க வேண்டும் என நினைக்கிறார்களே தவிர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மத்திய அரசில் அவர்காளல் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது. ஏன் என்றால் பிரதமரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். எனவே அங்கு அவர்கள் என்ன சொன்னாலும் நடக்காது. எந்த திட்டமும் கொண்டுவர முடியாது. அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நான் வெற்றி பெற்றால் பல திட்டங்களை நிறைவேற்ற முடியும். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்" என்று பேசினார். தொடர்ந்து துரைமுருகன் மகன் கதிர் ஆனந்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக துரைமுருகன் பேசுயது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது பேசிய ஏசி சண்முகம், "என் மீது அந்த குற்றச்சாட்டை அவர் சொல்லவில்லை அவர் தேர்தலில் எனது மகன் மீது லாரி ஏற்றி கொல்ல வேண்டுமென சதித்திட்டம் நடந்தது என்று சொன்னார் நடந்தது என்றால் உங்களோடு இருந்தவர்கள் அந்த சதியில் ஈடுபட்டார்களா அல்லது நீங்கள் கோயில் நிலத்தை ஆக்கிரமித்தீர்களே அவர்கள் அதில் ஈடுபட்டார்களா அல்லது உங்களால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களால் பழிவாங்கப்பட்டவர்கள் யாராவது இந்த பிரச்சனையை செய்கிறார்களா எனவே சதித் திட்டம் என்று சொன்னால் என்ன ஆதாரம் இருக்கிறது எதற்காக கற்பனையாக சொல்கிறார்கள் மக்கள் மத்தியில் ஒரு அனுதாபத்தை பெற வேண்டும் என்பதற்காக சொல்கிறார். எங்களை பொறுத்தவரை எறும்புக்கு கூட துரோகம் செய்ய மாட்டோம். ஏற்கனவே பணம் பதுக்கல் பிரச்சினையில் என்னுடன் இருந்தவர்களே காட்டிக் கொடுத்தார்கள் என்று துரைமுருகன் சொன்னார் எனவே இந்த சதியில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்றால் காவல்துறையிடம் புகார் கொடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தேவையற்ற அனுதாபங்களைத் தவிர்த்து மக்கழகள் மீது நம்பிக்கை வைத்து வாக்குகளை கேட்க வேண்டும்" என்று பேசுகிறார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.