ETV Bharat / state

லஞ்ச வழக்கில் சிபிஐ விதித்த தண்டனையை உறுதிசெய்த உச்சநீதிமன்றம்...

திருச்சி: லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததையடுத்து, ஓய்வுபெற்ற உதவி ஆணையர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

author img

By

Published : Aug 27, 2019, 5:05 AM IST

madurai cbi court news

வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68). இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பணியில் இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பாண்டியனுக்கு ஓராண்டு கால சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து பாண்டியன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக அவரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டதன்பேரில், திங்கள்கிழமையன்று மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும், அவர் தன்னுடைய உடல் நலக்குறைவை கவனத்தில் கொண்டு, வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவப்பிரகாசம், பாண்டியனை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

வேலூர் சத்துவாச்சேரியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68). இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

பணியில் இருந்த காலத்தில் லஞ்ச வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பாண்டியனுக்கு ஓராண்டு கால சிறைத் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து பாண்டியன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக அவரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டதன்பேரில், திங்கள்கிழமையன்று மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும், அவர் தன்னுடைய உடல் நலக்குறைவை கவனத்தில் கொண்டு, வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவப்பிரகாசம், பாண்டியனை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Intro:வருங்கால வைப்பு நிதி முன்னாள் ஆணையர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாண்டியன் என்பவருக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது இதனை அடுத்து வேலூர் சிறைச்சாலைக்கு இன்று அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
Body:வருங்கால வைப்பு நிதி முன்னாள் ஆணையர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்

திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற பாண்டியன் என்பவருக்கு சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது இதனை அடுத்து வேலூர் சிறைச்சாலைக்கு இன்று அவர் கொண்டுசெல்லப்பட்டார்.

வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 68).
இவர் திருச்சியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

இவர் பணியில் இருந்த சமயத்தில், கடந்த 2008ஆம் ஆண்டில் லஞ்ச வழக்கில் கைதானார்.

இந்த வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. முடிவில் பாண்டியனுக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.

இதை எதிர்த்து பாண்டியன், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக அவரை சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடையும்படி உத்தரவிட்டது. அதன்பேரில் அவர் நேற்று மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைந்தார்.

அவர், தன்னுடைய உடல் நலக்குறைவை கவனத்தில் கொண்டு, வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவப்பிரகாசம், அவரை வேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் வேலூர் சிறைக்கு இன் று கொண்டு செல்லப்பட்டார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.