ETV Bharat / state

திருச்சி விமான நிலையத்தில் 63 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - airport

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ. 63.80 லட்சம் மதிப்பிலான 974.5கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்படுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் 63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் 63 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
author img

By

Published : Jun 18, 2022, 7:21 AM IST

திருச்சி: சார்ஜா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரு வேறு விமானங்களில் பயணித்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த பயணியின் உடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 12.62 லட்சம் மதிப்புள்ள 245.500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் துபாயில் இருந்து வந்த பயணியை சோதனை செய்ததில் அந்த பயணி பயன்படுத்திய லேப்டாப்பில் சுமார் ரூ. 28.11லட்சம் மதிப்பிலான 280 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு பயணி கொண்டு வந்த 9 தங்க வளையல்கள் விமான நிலைய ஆண்கள் கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 23.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதன்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ. 63.80 லட்சம் மதிப்பிலான 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனை எடுத்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அக்னிபாத் திட்டம் - விமானப் படையில் வரும் 24ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு!

திருச்சி: சார்ஜா மற்றும் துபாய் நாடுகளில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரு வேறு விமானங்களில் பயணித்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து வந்த பயணியின் உடையில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 12.62 லட்சம் மதிப்புள்ள 245.500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் துபாயில் இருந்து வந்த பயணியை சோதனை செய்ததில் அந்த பயணி பயன்படுத்திய லேப்டாப்பில் சுமார் ரூ. 28.11லட்சம் மதிப்பிலான 280 கிராம் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு பயணி கொண்டு வந்த 9 தங்க வளையல்கள் விமான நிலைய ஆண்கள் கழிவறைக்குள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 23.07 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தங்கம் பறிமுதல்
தங்கம் பறிமுதல்

இதன்படி கடந்த இரண்டு நாட்களில் மட்டும் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ. 63.80 லட்சம் மதிப்பிலான 974.5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதனை எடுத்து வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அக்னிபாத் திட்டம் - விமானப் படையில் வரும் 24ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.