ETV Bharat / state

திருச்சியில் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் போலி வழக்கறிஞர் கைது - போலி வக்கீல்

திருச்சி: சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வழக்கறிஞர் போல் நடித்து அனைவரையும் ஏமாற்றிவந்த முகமது தாவர் அலி என்பவரை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Fake advocate arrested
author img

By

Published : Apr 26, 2019, 2:09 PM IST

திருச்சி புத்தூர் ஆபிசர்ஸ் காலனி அட்சய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சிராஜ்தீன் (53). புகைப்படக் கலைஞர். இவர் கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக நேற்றிரவு (ஏப்ரல் 25) சென்றார். அப்போது திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த முகமது தாவர் அலி என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தாவர் அலி, தான் வழக்கறிஞர் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இது குறித்து சிராஜ்தீன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சண்முகவேல் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அப்போது தாவர் அலி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் 100 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தாவர் அலி பி.எஸ்.சி., படித்துள்ளார் என்பதும், சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வழக்கறிஞரை போல் உலா வந்ததும், அவரது முகநூல் கணக்கில் தமிழ்நாடு செய்தியாளர் என்று குறிப்பிட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனால் அவர் போலி செய்தியாளராகவும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தாவர் அலியை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திருச்சி புத்தூர் ஆபிசர்ஸ் காலனி அட்சய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சிராஜ்தீன் (53). புகைப்படக் கலைஞர். இவர் கோட்டை ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்காக நேற்றிரவு (ஏப்ரல் 25) சென்றார். அப்போது திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த முகமது தாவர் அலி என்பவர் அங்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தாவர் அலி, தான் வழக்கறிஞர் என்று கூறி மிரட்டியுள்ளார்.

இது குறித்து சிராஜ்தீன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் சண்முகவேல் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார். அப்போது தாவர் அலி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் 100 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தாவர் அலி பி.எஸ்.சி., படித்துள்ளார் என்பதும், சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வழக்கறிஞரை போல் உலா வந்ததும், அவரது முகநூல் கணக்கில் தமிழ்நாடு செய்தியாளர் என்று குறிப்பிட்டுள்ளதும் தெரியவந்தது.

இதனால் அவர் போலி செய்தியாளராகவும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் தாவர் அலியை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Intro:கள்ள ரூபாய் நோட்டுகளுடன் போலி வக்கீல் திருச்சியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


Body:குறிப்பு: இதற்கான புகைப்படம் மெயில் மற்றும் எப்டிபி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

திருச்சி:

திருச்சியில் கள்ள நோட்டுகளுடன் போலி வக்கீலை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி புத்தூர் ஆபிசர்ஸ் காலனி அட்சய அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சிராஜ்தீன் (53). போட்டோகிராபர். இவர் கோட்டை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக நேற்று இரவு சென்றார். அப்போது திருச்சி ஜீவா நகரைச் சேர்ந்த முகமது தாவர அலி என்பவர் அங்கு வந்து உள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தாவர் அலி, தான் வக்கீல் என்று கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிராஜுதீன் கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டார். தாவர் அலி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் 100 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் தாவர் அலி பி.எஸ்சி., படித்துள்ளார். சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வக்கீலை போல் உலா வந்துள்ளார். அவரது பேஸ்புக் கணக்கில் தமிழ்நாடு ரிப்போர்ட்டர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் போலி நிருபராகவும் செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தாவர் அலியை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Conclusion:சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் வக்கீலைப் போல உலா வந்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.