ETV Bharat / state

மணப்பாறையில் தொடர் மயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது! - Ex army man arrested for peacock hunter

திருச்சி: மணப்பாறையில் இரட்டைக் குழல் துப்பாக்கியை பயன்படுத்தி தேசியப் பறவையான மயிலை தொடர்ந்து வேட்டையாடிவந்த முன்னாள் ராணுவ வீரரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Ex army man arrested for peacock hunter
author img

By

Published : Oct 21, 2019, 9:27 AM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நமது தேசியப் பறவையான மயில் இறைச்சிக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மணப்பாறை வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர், புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வீட்டின் உரிமையாளர் தங்கராசு இரண்டு மயில்களைக் கொன்று இறைச்சிக்காக தயார் செய்துகொண்டிருந்தபோது வனத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்கராசு முன்னாள் ராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளியாக பணியாற்றுவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்

மேலும், அவர் வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி மூலம் இறைச்சிக்காக அவ்வப்போது மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அவரிடமிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னாள் ராணுவ வீரர் ஒருவரே தேசியப் பறவையை துப்பாக்கியால் வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் தத்தளித்த மயில் குஞ்சுகள் பத்திரமாக மீட்பு - பாராட்டு மழையில் தீயணைப்புத்துறை!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நமது தேசியப் பறவையான மயில் இறைச்சிக்காக தொடர்ந்து வேட்டையாடப்படுவதும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் சுஜாதாவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மணப்பாறை வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர், புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வீட்டின் உரிமையாளர் தங்கராசு இரண்டு மயில்களைக் கொன்று இறைச்சிக்காக தயார் செய்துகொண்டிருந்தபோது வனத்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தங்கராசு முன்னாள் ராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளியாக பணியாற்றுவதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்

மேலும், அவர் வைத்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கி மூலம் இறைச்சிக்காக அவ்வப்போது மயில்களை வேட்டையாடியதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அவரிடமிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முன்னாள் ராணுவ வீரர் ஒருவரே தேசியப் பறவையை துப்பாக்கியால் வேட்டையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் தத்தளித்த மயில் குஞ்சுகள் பத்திரமாக மீட்பு - பாராட்டு மழையில் தீயணைப்புத்துறை!

Intro:மணப்பாறையில் தொடர் மயில் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் இராணு வீரர் கைது - வேட்டைக்கு பயன்படுத்திய இரட்டை குழல் துப்பாக்கி மற்றும் மயில்களின் உடல்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை.Body:
திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து தேசிய பறவையான மயில், இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதும், நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்புகளை சந்தித்தும் வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் சுஜாதா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மணப்பாறை வனச்சரகர் மாதேஸ்வரன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று இரவு புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு, வீட்டின் உரிமையாளர் தங்கராசு இரண்டு உயிரிழந்த மயில்களை வைத்து இறைச்சிக்காக தயார் செய்துகொண்டிருந்த தங்கராசுவை கைது செய்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தங்கராசு முன்னாள் இராணுவ வீரர் என்பதும், தற்போது துவரங்குறிச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காவலாளியாக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் இவர் வைத்திருக்கும் இரட்டை குழல் துப்பாக்கி மூலம் அவ்வப்போது மயில்களை இறைச்சிக்காக வேட்டையாடுவது வாடிக்கையானது என தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரட்டை குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர், தங்கராசுவை அவரது துப்பாக்கியுடன் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இராணுவ வீரரே தேசிய பறவையை துப்பாக்கி கொண்டு வேட்டையாடிய செய்தி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.