ETV Bharat / state

'தமிழ்நாடு வனப்பகுதிகளில்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகம்..!' - திண்டுக்கல் சீனிவாசன் - Minister Dindigul Srinivasan

திருச்சி: "பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வனப்பகுதிகளில்தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது" என்று, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
author img

By

Published : Jun 8, 2019, 9:33 PM IST

தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பில் திருச்சியில் நடைபெறும் பணிகளை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று ஆய்வுசெய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வனவர், வன பாதுகாவலர் என ஆயிரத்து 172 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைக்கப்பட்டு வரும் வன உயிரியல் பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி வழங்கப்படும்.

வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க சோலார் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் யாரும் விடுபடாமல் பட்டா வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்காக செயல்படும் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவர்கள் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.

நாட்டின் மொத்த பரப்பளவில் 33.3 சதவீதம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு தற்போது 18 சதவீத பசுமையை கடந்துள்ளது. தமிழ்நாட்டின் பசுமை 33.3 சதவீதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வனப்பகுதி அதிகரிப்பில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை உயர்கிறது என்றால் அங்கே வனம் செழிமையாக இருக்கிறது என்று அர்த்தம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக வனப்பகுதிகளில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, என்றார்.

தமிழ்நாடு வனத்தோட்ட கழகம் சார்பில் திருச்சியில் நடைபெறும் பணிகளை, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று ஆய்வுசெய்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

வனவர், வன பாதுகாவலர் என ஆயிரத்து 172 பேர் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைக்கப்பட்டு வரும் வன உயிரியல் பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி வழங்கப்படும்.

வனப்பகுதியில் வன விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க சோலார் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் யாரும் விடுபடாமல் பட்டா வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்காக செயல்படும் பள்ளிகளில் பயிலும் பழங்குடியின மாணவர்கள் கல்வி, விளையாட்டு ஆகியவற்றில் சிறந்து விளங்குகின்றனர்.

நாட்டின் மொத்த பரப்பளவில் 33.3 சதவீதம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழ்நாடு தற்போது 18 சதவீத பசுமையை கடந்துள்ளது. தமிழ்நாட்டின் பசுமை 33.3 சதவீதத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் வனப்பகுதி அதிகரிப்பில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை, சத்தியமங்கலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புலிகளின் எண்ணிக்கை உயர்கிறது என்றால் அங்கே வனம் செழிமையாக இருக்கிறது என்று அர்த்தம். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக வனப்பகுதிகளில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது, என்றார்.

Intro:வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


Body:திருச்சி: வன பரப்பளவு அதிகரிப்பில் தமிழகம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
தமிழ்நாடு வனத்தோட்ட கழக பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று திருச்சியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் 27.83 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வனத்துறைக்கு 28.27 கோடி ரூபாயை குத்தகைத் தொகையாக செலுத்தியுள்ளது. குறைந்த கால டெபாசிட்டாக 93.79 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. முதன்முறையாக அரசுக்கு 8.35 கோடி ரூபாயை பங்குத் தொகையாக தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் வழங்கியுள்ளது.
வனவர், வன பாதுகாவலர் என 1,172 பேர் புத்தாண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இ விண்ணப்பம் மூலமே விண்ணப்பிக்கப்பட்டு எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். அதேபோல் பதவி உயர்வும் உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே அமைக்கப்பட்டு வரும் வன உயிரியல் பூங்கா பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு திறக்கப்படும். ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நிதி வழங்கப்படும். இதர துறைகள் மூலமும் பூங்காவின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். வனப்பகுதியில் விலங்குகளுக்கு தண்ணீர் கொடுக்க சோலார் மூலம் மோட்டார் இயக்கப்பட்டு தொட்டியில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடியின மக்கள் யாரும் விடுபடாமல் அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். பழங்குடியின மக்களுக்காக செயல்படும் பள்ளிகளின் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். விளையாட்டு மற்றும் கல்வியிலும் அவர்கள் சிறந்து விளங்குகின்றனர். நாட்டின் மொத்த பரப்பளவில் 33.3 சதவீதம் பசுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழகம் தற்போது 18 சதவீத பசுமையை கடந்துள்ளது என்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
33.3 சதவீதத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் வனப் பகுதி அதிகரிப்பில் வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் முதுமலை மற்றும் சத்தியமங்கலத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இங்கு 229 புலிகள் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை உயர்கிறது என்றால் அங்கே வனம் செழிமையாக இருக்கிறது என்று அர்த்தம் என்றார்.


Conclusion:புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் வனம் செழிமையாக இருக்கிறது என அர்த்தம் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.