ETV Bharat / state

கூட்டணி கட்சிகள் மீது கே.என்.நேரு வருத்தம்

author img

By

Published : Nov 6, 2019, 9:41 AM IST

திருச்சி: ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.

admk criticizes Stalin Former DMK Minister sad, ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் வருத்தம்

அமெரிக்க மனிதநேய சங்கத்தின் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு தலைமை வகித்த திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், ' திராவிடர் கழகத்தை வீரமணி சிறப்பாக நடத்திவருகிறார். பெரியாரின் சொத்துக்களை வீரமணியிடம் ஒப்படைத்ததுதான் சரியான முடிவு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். இதுதான் வீரமணிக்கு கிடைத்த மிகப்பெரிய நோபல் பரிசாகும்.

admk criticizes Stalin Former DMK Minister sad, ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் வருத்தம்

திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறிய முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் என்று அமைச்சர் சீனிவாசன் கூறுகிறார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை பாராட்டுகிறாரா? திட்டுகிறாரா? எனபதுகூட தெரியவில்லை, அந்த அளவுக்கு மோசமாக பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் வேலை கேட்டுச் சென்றால் பிள்ளையை கொடுக்கிறார். இருப்பினும் ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

மேலும் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவினர் அவர்களது கட்சியினரை உசுப்பேற்றுகின்றனர். ஆனால் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடும், மக்கள் ஆதரவோடும் கண்டிப்பாக திமுக ஆட்சி அமையும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதி' - அமைச்சர் கே.சி.வீரமணி !

அமெரிக்க மனிதநேய சங்கத்தின் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

விழாவிற்கு தலைமை வகித்த திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில், ' திராவிடர் கழகத்தை வீரமணி சிறப்பாக நடத்திவருகிறார். பெரியாரின் சொத்துக்களை வீரமணியிடம் ஒப்படைத்ததுதான் சரியான முடிவு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். இதுதான் வீரமணிக்கு கிடைத்த மிகப்பெரிய நோபல் பரிசாகும்.

admk criticizes Stalin Former DMK Minister sad, ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் திமுக முன்னாள் அமைச்சர் வருத்தம்

திமுக தலைவர் ஸ்டாலினை அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறிய முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் என்று அமைச்சர் சீனிவாசன் கூறுகிறார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை பாராட்டுகிறாரா? திட்டுகிறாரா? எனபதுகூட தெரியவில்லை, அந்த அளவுக்கு மோசமாக பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் வேலை கேட்டுச் சென்றால் பிள்ளையை கொடுக்கிறார். இருப்பினும் ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்றார்.

மேலும் இடைத்தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவினர் அவர்களது கட்சியினரை உசுப்பேற்றுகின்றனர். ஆனால் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடும், மக்கள் ஆதரவோடும் கண்டிப்பாக திமுக ஆட்சி அமையும் என உறுதிப்படத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'உள்ளாட்சித் தேர்தலை நடக்கவிடாமல் செய்ய ஸ்டாலின் சதி' - அமைச்சர் கே.சி.வீரமணி !

Intro:ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே என் நேரு கூறினார். Body:குறிப்பு:
இந்த செய்திக்கான விசுவல் விரைவில் அறிவிக்கப்படும்...
திருச்சி:
ஸ்டாலின் குறித்து அதிமுகவினர் விமர்சனம் செய்யும்போது கூட்டணி கட்சியினர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று முன்னாள் அமைச்சர் கே என் நேரு கூறினார். அமெரிக்க மனிதநேய சங்கத்தின் மனிதநேய வாழ்நாள் சாதனையாளர் விருது திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழங்கப்பட்டது. அதற்கான பாராட்டு விழா இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது

அந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு தலைமை வகித்த திமுக முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேசுகையில்,
எந்த பலனும் இல்லை என்றாலும் திராவிடர் கழகத்தை வீரமணி சிறப்பாக நடத்தி வருகிறார். பெரியாரின் சொத்துக்களை வீரமணியிடம் ஒப்படைத்தது தான் சரியான முடிவு என்று கருணாநிதியே கூறியிருக்கிறார். இதுதான் வீரமணிக்கு கிடைத்த மிகப்பெரிய நோபல் பரிசாகும். ரஜினிக்கு கூட வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்துள்ளனர். ஏன் எங்களுக்கு கூட வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கு வார்கள். ஆனால் அந்த விருதை பெறுவது யார்? கொடுப்பது யார்? என்பதுதான் முக்கியமான விஷயம். அந்த வகையில் விருது தகுதியான நபருக்கு, தகுதியான நபர் இந்த விருதினை வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது.
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இதற்கு திமுக கூட்டணி கட்சியினர் யாரும் பதில் கூறுவது கிடையாது. ஸ்டாலின் உளறுகிறார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் அதிமுக அரசில் உள்ள அமைச்சர்கள் பலரும் உளர்த்தான் செய்கின்றனர். கம்பராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறிய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங் என்று அமைச்சர் சீனிவாசன் கூறுகிறார். அதேபோல் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவை பாராட்டுகிறாரா? திட்டுகிறாரா? என்று கூட தெரியவில்லை. அந்த அளவுக்கு மோசமாக பேசுகிறார். அமைச்சர் ஜெயக்குமாரிடம் வேலை கேட்டுச் சென்றால் பிள்ளையை கொடுக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஸ்டாலின் குறித்த விமர்சனங்களுக்கு திமுக கூட்டணி கட்சியினர் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம். எங்களை அடித்தால் அது உங்களை அடிப்பது போன்றதாகும். ஸ்டாலின் குறிப்பு வைத்துக்கொண்டு பேசுவதாக கூறுகின்றனர். முதல்வராக கருணாநிதி இருந்தபோது ஒரு துறை குறித்த ஒரு குறிப்பை மட்டுமே பார்த்துவிட்டு அந்த துறை குறித்த 100 சதவீத தகவல்களையும் பார்க்காமல் பேச வேண்டும் என்று அமைச்சர்களாகிய எங்களை கருணாநிதி அறிவுறுத்துவார். பார்த்து படித்தால் எங்களை அழைத்து கண்டிப்பார். ஆனால் தற்போது சட்டமன்றத்தில் முதல்வர் உள்பட அனைத்து அமைச்சர்களும் பார்த்து தான் படிக்கின்றனர். எது பேசினாலும் மணி அடிப்பதற்கு என்று ஒரு சபாநாயகர் இருக்கிறார். ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். ஸ்டாலின் முதல்வராக வர முடியாது என்று கூறுவதற்கு இவர் யார். இவரிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு தான் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் அப்படி தேவையே இல்லை. இடைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததால் அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவினர் அவர்களது கட்சியினரை உசுப்பேத்துகின்றனர். ஆனால் கூட்டணிக் கட்சியினரின் ஆதரவோடும், மக்கள் ஆதரவோடும் கண்டிப்பாக திமுக ஆட்சி அமையும். ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார். உள்ளாட்சித் தேர்தலில் திமுக தான் வெற்றி பெறும் என்று எம்ஜிஆரே கூறியிருக்கிறார். அதனால் தமிழகத்தில் கூட்டுறவு தேர்தலை போல இல்லாமல் சரியான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நிச்சயம் திமுக வெற்றி பெறும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.