ETV Bharat / state

'கேடுகெட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்' - வைகோ காட்டம் - MDMK Vs BJP

சென்னை : மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் தேர்வை இந்தியில்தான் எழுத வேண்டும் என்ற அறிவிப்பிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கேடுகெட்ட அறிவிப்பை நடுவண் அரசு திரும்பப் பெற வேண்டும் - வைகோ
கேடுகெட்ட அறிவிப்பை நடுவண் அரசு திரும்பப் பெற வேண்டும் - வைகோ
author img

By

Published : Oct 24, 2020, 12:51 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது; அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.

இதில் கணக்கர்கள், எழுத்தர்கள், கணினி பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 13 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, அக்டோபர் 7ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை என்று குறிப்பிடப்பட்டது. ஒரு தேதியை குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடாகும்.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, மத்திய அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில் முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும்.

அதற்கு இந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்காளர், எழுத்தர்கள், கணினி பதிவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் 40 மதிப்பெண்களுக்கு இந்தியில் தேர்வு எழுத வேண்டும். பன்னோக்கு பணியாளர்கள், ஆம்புலன்ஸ், கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பெண் பெற வேண்டும். செவிலியர்கள் 10 மதிப்பெண் பெற்றாக வேண்டும்.

அதாவது, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை; வேலைவாய்ப்பும் கிடையாது என்பதை மறைமுகமாக இந்த அறிவிப்பு கூறுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.

இத்தகைய கேடுகெட்ட அறிவிப்பை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (அக்டோபர் 24) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் (SAJKS) என்ற கிளை அமைப்பு (Undertaking Institute) இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுதும் கிராமப்புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது; அடிப்படை வசதிகளைச் செய்கின்றது.

இதில் கணக்கர்கள், எழுத்தர்கள், கணினி பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 13 ஆயிரம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, அக்டோபர் 7ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை என்று குறிப்பிடப்பட்டது. ஒரு தேதியை குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடாகும்.

இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுகின்றவர்கள், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வேலை செய்தாக வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக, மத்திய அரசுத் துறைகள் நடத்துகின்ற தேர்வுகளில், கேள்வித்தாள்கள் அனைத்தும், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். ஆனால், இந்த அறிவிப்பில் முதன்முறையாக, 25 மதிப்பெண்களுக்கான கேள்விகள் இந்தியில் மட்டுமே இருக்கும்.

அதற்கு இந்தியில்தான் விடைகள் எழுத வேண்டும் என வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்காளர், எழுத்தர்கள், கணினி பதிவர்கள், ஆய்வகப் பணியாளர்கள் மற்றும் 40 மதிப்பெண்களுக்கு இந்தியில் தேர்வு எழுத வேண்டும். பன்னோக்கு பணியாளர்கள், ஆம்புலன்ஸ், கார் ஓட்டுநர்கள் இந்தித் தேர்வில் 25 மதிப்பெண் பெற வேண்டும். செவிலியர்கள் 10 மதிப்பெண் பெற்றாக வேண்டும்.

அதாவது, இந்தி தெரியாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு, விண்ணப்பிக்கும் தகுதியும் இல்லை; வேலைவாய்ப்பும் கிடையாது என்பதை மறைமுகமாக இந்த அறிவிப்பு கூறுகிறது. இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரியவும், இந்திக்காரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்ற நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். இது இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் தேர்வு.

இத்தகைய கேடுகெட்ட அறிவிப்பை, மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இந்தி பேசாத மக்களை, இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கும் முயற்சிகளை, பாஜக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.