ETV Bharat / state

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ‘அவேர்னெஸ் அப்பா’ - அவேர்னெஸ் அப்பா

திருப்பூர்: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி 14 ஆண்டுகளாக, 60 வயதை கடந்த சிவசுப்பிரமணியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதால், பொதுமக்கள் இவரை ’அவேர்னெஸ் அப்பா’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.

அவேர்னெஸ் அப்பா
author img

By

Published : Jul 8, 2019, 7:22 PM IST

திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (60) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு வருகிறார். இதனால் அனைவராலும் 'அவேர்னெஸ் அப்பா" என்று அழைக்கப்படுகின்றார். தொடக்கக் காலங்களில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இவருக்கு, திருப்பூரைச் சேர்ந்த சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனத்தார், இருசக்கர வாகனம் அளித்து ஊக்கம் அளித்தனர். தற்போது இந்த இரு சக்கர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ‘அவேர்னெஸ் அப்பா’

தலைக்கவசம் அணிவோம்! இருசக்கர வாகனம் இருவருக்கே! இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யாதீர்! சாலை பாதுகாப்பு சாலைக்கு அல்ல, சாலையில் பயணிக்கு நமக்கே! என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இவர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் தனது உடையிலும் இது போன்ற வாசகங்களை அச்சிட்டு அதன் வாயிலாக மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூலை 16ஆம் தேதி ‘இறுதிச் சுற்று’ என்ற தலைப்பில் கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளவுள்ளார். இதற்காக தேனி வழியாக திருப்பூர் வந்தடைந்த சிவசுப்பிரமணி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வாழ்த்திப் பாராட்டிய எஸ்.பி பாஸ்கரன் விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பேரையூர் வழியாக இன்று ராஜபாளையத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் (60) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாகத் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு வருகிறார். இதனால் அனைவராலும் 'அவேர்னெஸ் அப்பா" என்று அழைக்கப்படுகின்றார். தொடக்கக் காலங்களில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இவருக்கு, திருப்பூரைச் சேர்ந்த சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனத்தார், இருசக்கர வாகனம் அளித்து ஊக்கம் அளித்தனர். தற்போது இந்த இரு சக்கர வாகனத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் ‘அவேர்னெஸ் அப்பா’

தலைக்கவசம் அணிவோம்! இருசக்கர வாகனம் இருவருக்கே! இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யாதீர்! சாலை பாதுகாப்பு சாலைக்கு அல்ல, சாலையில் பயணிக்கு நமக்கே! என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் இவர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் தனது உடையிலும் இது போன்ற வாசகங்களை அச்சிட்டு அதன் வாயிலாக மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் வரும் ஜூலை 16ஆம் தேதி ‘இறுதிச் சுற்று’ என்ற தலைப்பில் கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளவுள்ளார். இதற்காக தேனி வழியாக திருப்பூர் வந்தடைந்த சிவசுப்பிரமணி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வாழ்த்திப் பாராட்டிய எஸ்.பி பாஸ்கரன் விழிப்புணர்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, பேரையூர் வழியாக இன்று ராஜபாளையத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.

Intro: சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அவர்ணோஸ் அப்பா!


Body: திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் (60) என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டு வருகின்றார். இதனால் அனைவராலும் 'அவர்ணேஸ் அப்பா" என்று அழைக்கப்படுகின்றார். துவக்க காலங்களில் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு நடத்தி வந்த இவருக்கு திருப்பூரைச் சேர்ந்த சாஸ்தா மோட்டார்ஸ் நிறுவனத்தார் இருசக்கர வாகனம் அளித்து ஊக்கம் அளித்துள்ளனர். தற்போது இந்த இரு சக்கர வாகனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சென்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
தலைக்கவசம் அணிவோம்! இருசக்கர வாகனம் இருவருக்கே! இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்யாதீர்! சாலை பாதுகாப்பு சாலைக்கு அல்ல, சாலையில் பயணிப்பவர்களுக்கே! உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் இந்த வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் தனது உடையிலும் இது போன்ற வாசகங்களை அச்சிட்டு அதன் வாயிலாக மக்களிடம் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
இந்நிலையில் வரும் ஜூலை 16-ம் தேதி "இறுதி சுற்று"என்ற தலைப்பில் கன்னியாகுமரியில் இருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளவுள்ளார். இதற்காக தேனி வழியாக வந்தடைந்த சிவசுப்பிரமணி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து ஆதரவு கோரினார். அவரை வாழ்த்தி பாராட்டிய எஸ்.பி பாஸ்கரன் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேனி, ஆண்டிபட்டி,உசிலம்பட்டி, பேரையூர் வழியாக இன்று ராஜபாளையத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், என் கடைசி வினாடியும் சேவைக்காகவே இருக்க வேண்டும்! கடந்த 14 ஆண்டுகளாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி 14 முறை பயணம் செய்துள்ளேன். தற்போது 15வது முறையாக விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ள உள்ளேன். சாலை பாதுகாப்பு என்பதே இதன் நோக்கமாகும். இதனுடன் சேர்த்து உடல் உறுப்பு தானம், கண் தானம் ஆகியவற்றின் நன்மைகளை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றேன்.
மரணம் என்பது இயற்கையாக நிகழ வேண்டும். அது சாலை விபத்தில் அமைந்து விடக்கூடாது. இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்கையில் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவது, காப்பீட்டின் அவசியம், மற்றும் சாலை விதிகளை பின்பற்றுவது! உள்ளிட்டவைகளின் நன்மைகளை மக்களிடம் எடுத்துரைத்து வருகின்றேன்.
மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள தொண்டு நிறுவனங்கள், காப்பகங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், கண் மருத்துவமனைகள் மற்றும் ரத்த தானக் குழுக்கள் என சமூக ஆர்வலர்கள் அனைவரும் தன்னைத் தொடர்பு கொண்டால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தருவதாக கூறுகிறார்.



Conclusion: பேட்டி : சிவசுப்பிரமணி ( திருப்பூர்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.