ETV Bharat / state

திருப்பூரில் ரவுடியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி: சிசிடிவி வெளியீடு - கொலை முயற்சி

திருப்பூர்: ஏப்ரல் 14ஆம் தேதி குண்டாஸ் குற்றவாளியை பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலைசெய்ய முயற்சித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

கொலை முயற்சி
பட்டப்பகலில் கொலை முயற்சி
author img

By

Published : Apr 17, 2021, 5:14 PM IST

திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துவருகின்றன. மேலும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை பத்து மணியளவில் சாமுண்டிபுரம் பகுதியில் நடந்து வந்துகொண்டிருக்கும்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ராம்பிரபுவை கத்தியால் குத்தியதில், மயங்கி கீழே விழுந்தார்.

பட்டப்பகலில் கொலை முயற்சி: ரவுடியை கத்தியால் குத்திய அடையாளம் தெரியாத நபர்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் காவல் துறையினர், ராம்பிரபுவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகிய இருவரை கைதுசெய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்

திருப்பூர், சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரபு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்துவருகின்றன. மேலும் குண்டாஸ் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டு சில நாள்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி காலை பத்து மணியளவில் சாமுண்டிபுரம் பகுதியில் நடந்து வந்துகொண்டிருக்கும்பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் ராம்பிரபுவை கத்தியால் குத்தியதில், மயங்கி கீழே விழுந்தார்.

பட்டப்பகலில் கொலை முயற்சி: ரவுடியை கத்தியால் குத்திய அடையாளம் தெரியாத நபர்கள்

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலம்பாளையம் காவல் துறையினர், ராம்பிரபுவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்ச்செல்வன், சுரேஷ் ஆகிய இருவரை கைதுசெய்துள்ளனர்.

முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை முயற்சி சம்பவம் நடந்திருக்கலாம் எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலை முயற்சி தொடர்பான சிசிடிவி காட்சிகள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: 'அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் மக்களை சிரிக்க வைத்தவர்’ - விவேக் இறப்புக்கு மோடி இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.