ETV Bharat / state

ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரும் முருகன் - முருகன் உண்ணாவிரதம்

வேலூர் : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

vellore-central-jail
vellore-central-jail
author img

By

Published : Jun 9, 2020, 12:43 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனுக்கு, இலங்கையில் உயிரிழந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது தாயுடனும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடனும் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்ககோரி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை எட்டு நாள்கள் கடந்து இன்று ஒன்பதாவது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறைத்துறை அலுவலர்கள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகனுக்கு, இலங்கையில் உயிரிழந்த அவரது தந்தையின் இறுதிச் சடங்கில் காணொலி அழைப்பு மூலம் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தனது தாயுடனும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியுடனும் காணொலி அழைப்பில் பேச அனுமதிக்ககோரி, கடந்த ஜூன் ஒன்றாம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை எட்டு நாள்கள் கடந்து இன்று ஒன்பதாவது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்க்கொண்டு வருகிறார். இதுகுறித்து பேசிய அவரது வழக்கறிஞர் புகழேந்தி, உண்ணாவிரதத்தை கைவிடும்படி சிறைத்துறை அலுவலர்கள் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேலூர் மத்திய சிறையில் முருகன் உண்ணாவிரதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.