ETV Bharat / state

’சி.ஏ.ஏ. சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது’ - Thol. Thirumavalavan speech against CAA

தூத்துக்குடி:குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

thirumavalavan
thirumavalavan
author img

By

Published : Jan 29, 2020, 9:47 AM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 22ஆம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பேரணி நடைபெறவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கைவிடுத்தும் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதிவரை கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இந்தக் கையெழுத்து படிவங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

மோடி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.

ரஜினி பின்னணியில் சங்பரிவார்?

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களைச் சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளன.

சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இதைத் தடுப்பதற்காக இதற்கென தனியே உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும். தனிக்காவல்படை ஒன்றை உருவாக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியாரை பேசியதன் பிண்ணனியில் சங்பரிவார் அமைப்புகள் உள்ளதாகச் சந்தேகப்படுகிறோம்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக இந்த ஊழல் முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதி விசாரணை நடத்திட முதலமைச்சர் ஆணையிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினி குறிப்பிட்ட 'அந்த' ஊர்வல செய்தியை மீண்டும் பிரசுரித்த துக்ளக்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 22ஆம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'தேசம்காப்போம்' பேரணி நடைபெறவுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கைவிடுத்தும் இந்தப் பேரணி நடைபெறுகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இணைந்து பிப்ரவரி 2ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 8ஆம் தேதிவரை கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இந்தக் கையெழுத்து படிவங்கள் அனைத்தையும் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம்.

தொல்.திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

மோடி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. இந்தச் சட்டத்தை திரும்பப் பெறும்வரையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.

ரஜினி பின்னணியில் சங்பரிவார்?

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களைச் சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்துவருவதாகத் தெரிகிறது. இதன் பின்னணியில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளன.

சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. இதைத் தடுப்பதற்காக இதற்கென தனியே உளவுப்பிரிவு உருவாக்க வேண்டும். தனிக்காவல்படை ஒன்றை உருவாக்க வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியாரை பேசியதன் பிண்ணனியில் சங்பரிவார் அமைப்புகள் உள்ளதாகச் சந்தேகப்படுகிறோம்.

டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக இந்த ஊழல் முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. டி.என்.பி.எஸ்.சி. தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நீதி விசாரணை நடத்திட முதலமைச்சர் ஆணையிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ரஜினி குறிப்பிட்ட 'அந்த' ஊர்வல செய்தியை மீண்டும் பிரசுரித்த துக்ளக்!

Intro:தமிழகத்தில் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க தனி போலீஸ் பிரிவு உருவாக்க வேண்டும் - விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி
Body:தமிழகத்தில் சிலைகள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க தனி போலீஸ் பிரிவு உருவாக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேட்டி
கூறினார்.


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,

பிப்ரவரி 22ஆம் தேதி திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் "தேசம்காப்போம்" பேரணி நடைபெற உள்ளது. குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் இந்த பேரணி நடைபெறுகிறது. அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சிகள் இணைந்து பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து பிப்ரவரி 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறோம். இந்த கையெழுத்து படிவங்கள் அனைத்தையும் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். மோடி அரசு மதத்தின் பெயரால் மக்களை பிளவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது என்று பொருள் இல்லை. ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் மதசார்பின்மை என்கிற மகத்தான கோட்பாட்டை அளிக்கும் வகையில் மோடி அரசு திருத்த சட்டம் அமைந்திருக்கிறது. இந்த சட்டத்தை திரும்பப்பெற வரையில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போராடுவோம்.

பெரியார், அம்பேத்கர் ஆகிய தலைவர்களின் அடையாளங்களை சிதைப்பது, சிலைகளை உடைப்பது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சங்பரிவார் அமைப்புகளின் தூண்டுதலால் இத்தகைய செயல்கள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதன் பின்னணியில் பிஜேபி கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் உள்ளன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கலியப்பேட்டையில் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்திய வழக்கில் அதில் மூவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் ஒருவர் பாமகவை சார்ந்தவர் என்பது தெரியவந்திருக்கிறது. கூடா நட்பு எத்தகைய குற்றச் செயல்களையும் செய்வதற்கு இட்டுச் செல்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயலை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது. இத்தகைய குற்றச் செயல்களை தடுப்பதற்கு ஏற்ற வகையில் இதற்கென தனியே உளவு பிரிவு உருவாக்க வேண்டும். தனி போலீஸ் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

ஒரேநாடு, ஒரே ரேஷன்கார்டு திட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானை நேரில் சந்தித்து எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம். தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி தங்களுடைய அரசை இடையிடையே நிலைநாட்ட வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் விரும்புகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியாரை பேசியதன் பிண்ணனியில் சங்பரிவார் அமைப்புகள் உள்ளதாக சந்தேகப்படுகிறோம்.

டி.என்.பி.எஸ்சி முறைகேடு விவகாரத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இல்லாமல் இவ்வளவு துணிச்சலாக இந்த ஊழல் முறைகேடுகள் இந்த நிறுவனத்தில் நடந்திருக்க வாய்ப்பில்லை. டிஎன்பிஎஸ்சி தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதி விசாரணை நடத்திட முதலமைச்சர் ஆணையிட வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.