ETV Bharat / state

சாத்தான்குளம் லாக்அப் மரணம்: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட்!

author img

By

Published : Jun 28, 2020, 9:30 PM IST

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஜஜி உத்தரவிட்டுள்ளார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும், ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி, கடந்த 19ஆம் தேதி இரவில் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட அங்கு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வியாபாரிகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்பட்ட உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆய்வாளர் பெர்னார்டு சேவியர்
ஆய்வாளர் பெர்னார்டு சேவியர்

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை காத்திருப்போர் பட்டியலிலிருந்து நீக்கி, பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரகக் காவல் துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வியாபாரிகள் உயிரிழப்பு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின்படி இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:'ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல் துறையினருக்கும் கெட்ட பெயர்'- ஏடிஜிபி ரவி வேதனை!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும், ஊரடங்கை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாகக்கூறி, கடந்த 19ஆம் தேதி இரவில் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட தந்தையும், மகனும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல தரப்பினரும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கண்டனக் குரல் எழுப்பிவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட அங்கு பணியாற்றிய காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். வியாபாரிகளை அடித்துக் கொடுமைப்படுத்தியதாகச் சொல்லப்பட்ட உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆய்வாளர் பெர்னார்டு சேவியர்
ஆய்வாளர் பெர்னார்டு சேவியர்

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரை காத்திருப்போர் பட்டியலிலிருந்து நீக்கி, பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரகக் காவல் துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிமன்யு உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நாகர்கோவில் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பெர்னார்டு சேவியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, வியாபாரிகள் உயிரிழப்பு தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்ததுடன், கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவர் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த அதிரடி உத்தரவு பிறப்பித்தது. உத்தரவின்படி இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:'ஒரு சில காவலர்களால் ஒட்டுமொத்த காவல் துறையினருக்கும் கெட்ட பெயர்'- ஏடிஜிபி ரவி வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.