ETV Bharat / state

தன்மானத்தை விட்டுக்கொடுத்த கட்சி அதிமுக - அழகிரி தாக்கு

author img

By

Published : Nov 23, 2019, 7:54 AM IST

தூத்துக்குடி: தமிழ்நாட்டின் தன்மானத்தையே விட்டுகொடுத்த கட்சி அதிமுகதான் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

அழகிரி

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “தவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காகவும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற "கல்வி கடனை" வசூல் செய்து கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் பெரும் முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் அமைப்பு ரீதியாக திரண்டிருப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஓரளவு வசதியானவர்களுக்குதான் கிடைக்கிறது. ஆனால் எதும் இல்லாத சாதாரண மக்களுக்கு எந்த திட்டமும் கிடைப்பதில்லை. கறுப்புப் பணம் ஒழிந்தது என்று மோடி அரசினர் கூறி வருகிறார்கள்.

கே.எஸ். அழகிரி உரை

ஆனால் அந்த கறுப்புப்பணம் யாருக்கும் வந்து சேரவில்லை. நம்மை நாம் சுய விமர்சனம் செய்ய வேண்டிய நேரம் இது. இந்தியாவிற்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை மக்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோம். அதனால்தான் ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைக்கவில்லை. நாம் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மோசமான அரசு உள்ளது. எல்லா அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தன்மானத்தையே விட்டுக்கொடுத்த கட்சி அதிமுகதான்” என்றார்.

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி, மகளிர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், “தவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காகவும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற "கல்வி கடனை" வசூல் செய்து கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது. ஆனால் பெரும் முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் அமைப்பு ரீதியாக திரண்டிருப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஓரளவு வசதியானவர்களுக்குதான் கிடைக்கிறது. ஆனால் எதும் இல்லாத சாதாரண மக்களுக்கு எந்த திட்டமும் கிடைப்பதில்லை. கறுப்புப் பணம் ஒழிந்தது என்று மோடி அரசினர் கூறி வருகிறார்கள்.

கே.எஸ். அழகிரி உரை

ஆனால் அந்த கறுப்புப்பணம் யாருக்கும் வந்து சேரவில்லை. நம்மை நாம் சுய விமர்சனம் செய்ய வேண்டிய நேரம் இது. இந்தியாவிற்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை மக்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோம். அதனால்தான் ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைக்கவில்லை. நாம் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மோசமான அரசு உள்ளது. எல்லா அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டின் தன்மானத்தையே விட்டுக்கொடுத்த கட்சி அதிமுகதான்” என்றார்.

Intro:தமிழகத்தின் தன்மானத்தையே விட்டுகொடுத்த கட்சி அதிமுக தான் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு

Body:
தூத்துக்குடி

மத்திய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வி.வி.டி.சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், வசந்தகுமார் எம்பி, மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஜான்சிராணி, எம். எல். ஏ.கள் பிரின்ஸ், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில்,
தவறானவர்கள் கையில் ஆட்சி போயிருக்கிறது என்பதற்காகவும், தவறான பொருளாதாரக் கொள்கையை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
நாடு முழுவதும் கல்விக்காக மாணவர்கள் பெற்ற "கல்வி கடனை" வசூல் செய்து கொடுக்கும் பணியை அனில் அம்பானியிடம் மத்திய அரசு கொடுத்துள்ளது.
ஆனால் பெரு முதலாளிகளுக்கு அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்த தொகை மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய்.

இந்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் அமைப்பு ரீதியாக திரண்டிருப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள், ஓரளவு வசதியானவர்களுக்கு தான் கிடைக்கிறது. ஆனால் எதும் இல்லாத சாதரான மக்களுக்கு எந்த திட்டமும் கிடைப்பதில்லை.
கருப்பு பணம் ஒழிந்தது என்று மோடி அரசினர் கூறி வருகிறார்கள். ஆனால் அந்த கருப்புப்பணம் யாருக்கும் வந்து சேரவில்லை. நம்மை நாம் சுய விமர்சனம் செய்ய வேண்டிய நேரமிது. இந்தியாவிற்காக காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதை மக்களிடம் சொல்லாமல் விட்டு விட்டோம். அதனால் தான் ஆட்சி அதிகாரம் நமக்கு கிடைக்கவில்லை. நாம் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுகிறவர்களாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கேவலமான அரசாங்கம் உள்ளது. எல்லா அமைச்சர்கள் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தின் தன்மானத்தையே விட்டுகொடுத்த கட்சி அதிமுக தான்.
ஆகவே, நாட்டை நல்வழியில் கொண்டு செல்ல காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமையவேண்டும். அதற்கு நாம் உழைக்கவேண்டும் என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.