ETV Bharat / state

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெட்டிக்கொலை

திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 11, 2021, 12:24 PM IST

கலவரம்
கலவரம்

திருவாரூர்: மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தவர் தமிழார்வன் (55). இவர் தனது காரில் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரை வழிமறித்த மர்ம கும்பல் தமிழார்வனை சராமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மன்னார்குடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

ஆத்திரம் அடைந்த தமிழார்வன் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தும், இருசக்கர வாகனங்களை கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை

திருவாரூர்: மன்னார்குடி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தவர் தமிழார்வன் (55). இவர் தனது காரில் மன்னார்குடி பெரியார் சிலை முன்பு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய காரை வழிமறித்த மர்ம கும்பல் தமிழார்வனை சராமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மன்னார்குடி காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

ஆத்திரம் அடைந்த தமிழார்வன் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தும், இருசக்கர வாகனங்களை கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: ஹரியானாவில் மல்யுத்த வீராங்கனை சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.